பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி
Allow me to speak: Rahuls letter to Lok Sabha Speaker  பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்


புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லி., இரு அவைகளும் தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பதில் உரையாற்ற அனுமதி கேட்டு காங்.எம்.பி., ராகுல், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதிள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
22-மார்-202310:06:23 IST Report Abuse
Yes your honor உளறு உளறு என்று உளறி அனைத்தும் பொய்யாக பேசப்போகிறார். இந்த ஆள் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன கேட்டுவிடப் போகிறது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
22-மார்-202309:27:29 IST Report Abuse
Sivagiri தம்பி வாயைத் திறக்காத வரை தம்பிக்கும் நல்லது - காங்-கம்பெனிக்கும் நல்லது -
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
22-மார்-202307:17:40 IST Report Abuse
vadivelu சபையை நடத்த விட்டால்தான் பேச முடியும்.கடவுள் என்று ஒன்று இருந்தால் உங்களுக்கெல்லாம் நல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X