பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்| Allow me to speak: Rahuls letter to Lok Sabha Speaker | Dinamalar

பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (9) | |
புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி
Allow me to speak: Rahuls letter to Lok Sabha Speaker  பேச அனுமதி கொடுங்க: லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்


புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லி., இரு அவைகளும் தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பதில் உரையாற்ற அனுமதி கேட்டு காங்.எம்.பி., ராகுல், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதிள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X