பயங்கரவாதத்திற்கு நிதியுதவி; முக்கிய புள்ளி அதிரடி கைது

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீநகர்: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், ஸ்ரீநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.ஜம்மு - காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, 2020 அக்டோபரில் கண்டுபிடித்தது.இது குறித்து வழக்குப் பதிவு செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி
Terrorist financing is the key point of action    பயங்கரவாதத்திற்கு நிதியுதவி; முக்கிய புள்ளி அதிரடி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ஸ்ரீநகர்: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், ஸ்ரீநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, 2020 அக்டோபரில் கண்டுபிடித்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய புள்ளியான இர்பான் மெஹ்ராஜ் என்பவரை, ஸ்ரீநகரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.


latest tamil news


இது குறித்து, என்.ஐ.ஏ., அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா நிறுவனத்தில், 2021ல், தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேசுடன், இர்பான் மெஹ்ராஜ் இணைந்து பணியாற்றி உள்ளார்.

இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தது. மேலும், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் பயங்கரவாதத்திற்கு ஆட்களை திரட்டியது.

இந்த நிறுவனத்துடன், மற்ற அரசு சாரா நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
22-மார்-202312:03:03 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ராவுளு பாரத் ஜோடூ பாதயாத்திரையில் கூடி கும்மாளம் அடித்த அநேகர் நாட்டுக்கு எதிரானவர்கள் லிஸ்ட் ல இருக்கலாம் .. இவர்களையும் கண்டறிந்து ரிவிட் அடித்தால் நலம் ஐயா
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
22-மார்-202311:33:35 IST Report Abuse
M  Ramachandran த்ரோகிகளின் உடம்பில் தார் குச்சியை ஏத்தி உண்மையாய்ய்ய வரவழையுங்கள்
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
22-மார்-202310:43:40 IST Report Abuse
Raa அப்படியே மதமாற்ற கும்பலுக்கும் பணம் தரும் கும்பலுக்கு ஒரு ஆப்பு வையுங்கள் ஆபீசர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X