புதுடில்லியில் கருத்தரங்கு: தவிர்த்தது பாகிஸ்தான்

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: தவறான வரைபடத்தை பயன்படுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று நடந்த எஸ்.சி.ஓ., நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, புதுடில்லியில் வரும் மே மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன் பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.அந்த வகையில், இந்த அமைப்பில் உள்ள
Seminar in New Delhi: Skipped by Pakistan  புதுடில்லியில் கருத்தரங்கு: தவிர்த்தது பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தவறான வரைபடத்தை பயன்படுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று நடந்த எஸ்.சி.ஓ., நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.


எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, புதுடில்லியில் வரும் மே மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன் பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.


அந்த வகையில், இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ மருத்துவப் பிரிவு தொடர்பான கருத்தரங்கு, புதுடில்லியில் நேற்று நடந்தது. அதிகாரிகள் நிலையிலான இந்த கருத்தரங்கில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.


இந்த கருத்தரங்குக்கு முன் நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்றது. அப்போது, ஜம்மு - காஷ்மீரை தன் நாட்டின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியது.


latest tamil news

இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வரைபடத்தை திருத்த வேண்டும் அல்லது கருத்தரங்கில் பங்கேற்கக் கூடாது என கடுமையாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கருத்தரங்கில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.


கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது, 2020 செப்டம்பரில், 'ஆன்லைன்' வாயிலாக இது போன்ற ஒரு கூட்டம் நடந்தது. அப்போதும், பாகிஸ்தான் தவறான வரைபடத்தை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Fastrack - Redmond,இந்தியா
22-மார்-202314:15:59 IST Report Abuse
Fastrack இப்போ பிச்சை எடுப்பதில் பாகிஸ்தான் பிசி ..பூகம்பம் பாதிப்பை ஏற்படுத்தியதாக நீலிக்கண்ணீர் வடித்து டாலர் அதிகமா கேப்பாங்க ..அவங்க சகவாசம் தேவையில்லாத ஆணி ...
Rate this:
Cancel
22-மார்-202313:13:37 IST Report Abuse
ராஜா வருவதற்கு வக்கு இருந்திருக்காது.
Rate this:
Cancel
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
22-மார்-202309:18:37 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana பாலைவன மத வெறியர்களுக்கு காஷ்மீர் வேண்டுமாம். இதை எல்லாம் பார்க்கும் பொது பிரிட்டிஷ் சமச நேரு , காந்தி மீதான கோபம் அதிகமாகிறது. காஷ்மீரை ம்பெகிஸ்தானின் பிடியில் இருந்து மீட்க சரியான வாய்ப்பை, இந்திரா கான் போலி காந்தி வீணடித்து விட்டார். பங்களாதேஷ் போரின் போது காஷ்மீரை விட்டு வெளீயேறினால் தான் போர் கைதிகளை விடுவிப்போம் என்று ஒரு கண்டிஷன் போட்டிருந்தாள் போதும். அப்போதே பாக்கிஸ்தான் அடங்கி இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X