சீமானுடன் கூட்டணி: பழனிசாமி புது கணக்கு

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (34) | |
Advertisement
அ.தி.மு.க.,வும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்க, ரகசிய பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர் கட்சி துவங்கியதில் இருந்து, தனித்துப் போட்டியிட்டே வருகிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அக்கட்சி தனித்து நின்று, பலத்த போட்டிக்கு இடையில், 10 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றது.கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் என
Alliance with Seeman: Palaniswami is a new account  சீமானுடன் கூட்டணி: பழனிசாமி புது கணக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அ.தி.மு.க.,வும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்க, ரகசிய பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.


நாம் தமிழர் கட்சி துவங்கியதில் இருந்து, தனித்துப் போட்டியிட்டே வருகிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அக்கட்சி தனித்து நின்று, பலத்த போட்டிக்கு இடையில், 10 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றது.


கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்த அக்கட்சி, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றது.


கடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி மொத்தமாக, 30 லட்சத்து, 43 ஆயிரத்து 657 ஓட்டுக்களை பெற்றுள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் மட்டும், 48 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றார்.


latest tamil news

மாதவரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகள் ஒவ்வொன்றிலும், 25 ஆயிரம் ஓட்டுக்களுக்கு கூடுதலாக, அக்கட்சிக்கு கிடைத்தது. ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேலாக, அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.


அதேபோல், 14 தொகுதிகளில், 20 ஆயிரம்; 36 தொகுதிகளில் 15 ஆயிரம்; 100 தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வீதம் பெற்றுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுத்ததே, இந்த ஓட்டுக்கள் தான் என, பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.


வரும் லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் கணிசமான பங்கை, அவர்கள் கைப்பற்றி விடுவர்.


அதற்கு ஈடுசெய்ய சீமானை சேர்க்கலாம் என, தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால், லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, 2026 சட்டசபை தேர்தலுக்கும் கை கொடுக்கும் என்றும், அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.


இந்நிலையில், பழனிசாமியின் குடும்ப உறுப்பினர் ஒருவரும், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ஒருவரும் ரகசிய பேச்சு நடத்திய தகவல் தெரியவந்துள்ளது.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
28-மார்-202312:47:16 IST Report Abuse
Sridhar அம்மா இல்லாத அதிமுக ஒரு வெத்துவேட்டு. அதிமுக ஓட்டுக்கள் எல்லாம் அண்ணாமலைக்கு போகும். வரும் தேர்தலில் அக்கட்சி மூன்றாம் அல்லது நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு, சீமான் கட்சி போலயே ஆகிவிடும். கூட்டணி அமைப்பது பொருத்தமாக இருக்கும்
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
25-மார்-202308:40:40 IST Report Abuse
Muthu தப்பே இல்லை .... மூழ்கப்போகும் இரண்டு படகுகள் ஒன்று சேர்ந்தால் பெரிய வலிமையான கப்பல் ஆகி விடாது. இரண்டும் காணாமல் போவது உறுதி. இதனால் பிஜேபி தன கணக்கை தமிழ்நாட்டில் பலமாக துவங்க, ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்க ஜனநாயகம்.. தக்க பாடம் கற்ற பிறகுதான் EPS திருத்துவார் என கர்மா இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.
Rate this:
Cancel
Kanagaraj M - Pune,இந்தியா
24-மார்-202312:17:18 IST Report Abuse
Kanagaraj M இதற்கு வாய்ப்பே இல்லை என மனது சொல்கிறது. சீமான் என்றுமே திராவிட கட்சியோடு கூட்டணி வைக்க மாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X