திருப்பூர் திரும்பும் வடமாநில தொழிலாளர்!

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
திருப்பூர்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த மாநிலம் சென்ற வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர்.திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற, பிரச்னை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த மாநிலம் சென்ற வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர்.

திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற, பிரச்னை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



latest tamil news



திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம், 5ம் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரயிலில், 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.

பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ரயிலில் திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர்.திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ரயில்களில் அதிகளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-202307:16:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு சங்கியையும் இங்கே காணோம். அவனுங்க பீகாருக்கு போயிட்டாங்க போல.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-202311:39:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அண்ணாமலே இவர்களுக்கு கொடுத்த கியாரண்டியால் தான் திரும்ப வர்றாங்கன்னு புளுகவேண்டியது தானே
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-202311:37:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால் - இயல்புநிலை எப்பவுமே இருந்ததை பொய்யாக பிரச்சினை இருப்பதாக, இல்லாத பிரச்சினையை இருக்குன்னு சொல்லி வதந்தியை கெளப்பிவிட்டதே தமிழக பாஜாக்கா புளுகு வண்டிகள் மற்றும் சங்கி மீடியாக்கள் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X