விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேளாண் பல்கலைக்கு ரூ.100 கோடி!| 100 crores to the University of Agriculture to solve the problems of farmers! | Dinamalar

விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேளாண் பல்கலைக்கு ரூ.100 கோடி!

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | |
கோவை: தமிழக வேளாண் பட்ஜெட்டில், கோவை மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.அதன் விவரம்:* கருவேப்பிலை சாகுபடியை, 5 ஆண்டுகளில், 1,500 ஹெக்டேரில் உயர்த்துவதற்கு ரூ.2.5 கோடியில் கருவேப்பிலை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.* கோவை மாவட்டம் மலையடிபாளையம், நெகமம், காரமடை, ஆனைமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கூடுதல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.*


கோவை: தமிழக வேளாண் பட்ஜெட்டில், கோவை மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம்:
* கருவேப்பிலை சாகுபடியை, 5 ஆண்டுகளில், 1,500 ஹெக்டேரில் உயர்த்துவதற்கு ரூ.2.5 கோடியில் கருவேப்பிலை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* கோவை மாவட்டம் மலையடிபாளையம், நெகமம், காரமடை, ஆனைமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கூடுதல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

* வேளாண் இயந்திர பணிமனையில் டிராக்டர், அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பழுது நீக்கம், பராமரிப்பு குறித்த பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படும்.

* செங்காத்தாள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் வர்த்தகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.



latest tamil news



* விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதி வழங்கப்படும்.

* தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்புடன் பழப்பயிர் நடவு செய்து, சொட்டு நீர் பாசன வசதி செய்ய ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* வேளாண், தோட்டக்கலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் பூச்சிகள் பற்றிய புரிதலை மேம்படுத்த, கோவை வேளாண் பல்லை பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.

* அரிய வகை தாவரத்தை பாதுகாத்து, அழியும் நிலையில் உள்ள தாவர பல்லுயிர் செல்வத்தை மேம்படுத்த, மலரியல் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், சிறந்த பூங்காக்களை உருவாக்கவும், தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கவும், தாவரவியல் பூங்காவை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

* நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ள வட்டங்களில், நுண்ணீர் பாசன முறை அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்படும்.

* குறு, சிறு தானிய சாகுபடி பரப்பை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்தி, மதிப்பு கூட்டி, நுகர்வோர் பயன்பாட்டை அதிகரிக்க ரூ.4 கோடி வழங்கப்படும்.


திருப்பூர் மாவட்டம்



* இயற்கை உர தேவையை பூர்த்தி செய்ய, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிப்பு கட்டமைப்பு உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கப்படும்.

* முருங்கை சாகுபடி உயர்த்த நிதி ஒதுக்கி, மதிப்பு கூட்டி, ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

* பசுமை குடில், நிழல் வலை குடிலில் உயர் மதிப்புள்ள காய்கறிகள், பூக்களை ஆண்டு முழுவதும் சாகுபடி அதிக வருவாய் ஈடுபடுவதற்கு, வரும் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை தரப்படும்.

* மூலனுார் குட்டை முருங்கை அகில உலக அளவில் உயர் மதிப்பு பெற புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவைகளை செய்து தருவதற்கு நிதி ஒதுக்கப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, ஐந்தாண்டுகளில், ரூ.50 கோடி சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X