ஹிந்துக்கள் குறித்து அவதுாறு நடிகர் சேத்தன் சிறையில் அடைப்பு
ஹிந்துக்கள் குறித்து அவதுாறு நடிகர் சேத்தன் சிறையில் அடைப்பு

ஹிந்துக்கள் குறித்து அவதுாறு நடிகர் சேத்தன் சிறையில் அடைப்பு

Added : மார் 22, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
பெங்களூரு, : ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக, நடிகர் சேத்தன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.'கர்நாடகாவில், திப்பு சுல்தானை கொன்றது மாண்டியாவை சேர்ந்த உரிகவுடா, நஞ்சே கவுடா' என பா.ஜ.,வினர் கூறினர். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகளும், 'ஆதாரம் இருந்தால் காட்டலாம்' என
Actor Chetan jailed for insulting Hindus   ஹிந்துக்கள் குறித்து அவதுாறு நடிகர் சேத்தன் சிறையில் அடைப்பு



பெங்களூரு, : ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக, நடிகர் சேத்தன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

'கர்நாடகாவில், திப்பு சுல்தானை கொன்றது மாண்டியாவை சேர்ந்த உரிகவுடா, நஞ்சே கவுடா' என பா.ஜ.,வினர் கூறினர். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகளும், 'ஆதாரம் இருந்தால் காட்டலாம்' என தெரிவித்தார்.

இந்நிலையில், கன்னட நடிகர் சேத்தன், 'டுவிட்டர்' பதிவில், 'ஹிந்துத்துவா என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. ராமர், ராவணனை தோற்கடித்து அயோத்திக்கு திரும்பிய போது, இந்திய தேசம் தொடங்கியது என சாவர்க்கர் கூறியது பொய்.

'பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என கூறுவதும்; உரிகவுடா, நஞ்சேகவுடா திப்புவை கொன்றது என கூறுவதும் பொய். ஹந்துத்துவாவை உண்மையால் தோற்கடிக்க முடியும்; உண்மை என்பது சமத்துவம்' என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகுமார் என்பவர் சேஷாத்திரிபுரம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து நடிகர் சேத்தனை, நேற்று அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.

பின், 32வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், சேத்தனை ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (10)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-மார்-202318:59:02 IST Report Abuse
Vijay D Ratnam ஹிந்து மதத்தை பற்றி தவறாக சித்தரித்து பேசியதால் ஜெயிலுக்கு அனுப்ப பட்டுள்ளார். இஸ்லாத்தை பற்றி பேசியிருந்தார் என்றால் என்னவாகி இருக்கும். கிறிஸ்தவத்தை பற்றி பேசி இருந்தால் என்னவாகி இருக்கும்.
Rate this:
Cancel
Ratan Kan - Bangalore,இந்தியா
25-மார்-202300:11:16 IST Report Abuse
Ratan Kan அவர் ஹிந்து மதத்தை அரசியல் செய்வதை தான் விமர்சனம் செய்திருக்கிறார், ஹிந்து மதத்தை அல்ல.. இப்படி எடுத்ததெற்கெல்லாம் வழக்கு போடுவது சிறையில் அடைப்பது எல்லாம் மிகவும் கேவலமாக இருக்கிறது.
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
25-மார்-202306:08:40 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaஉங்கள் மதத்தை பற்றி யாரேனும் ஏதேனும் பேசினால் உலகின் எங்கோ ஒரு மூலையில் பேசினால் கூட நீங்கள் இங்கே ஏன் வன்முறை செய்கிறீர்கள்? சில மாதங்களுக்கு முன்னாள் பெங்களூரில் நீங்கள் அதாவது உங்கள் மதத்தினால் செய்த வன்முறை மறந்து விட்டேர்களா?...
Rate this:
25-மார்-202311:59:09 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஹிந்துத்வா வுக்கு சட்ட அங்கீகாரம் உண்டு .... சுப்ரீம் கோர்ட்டே அங்கீகரித்த ஒன்று .......
Rate this:
chola perarasu - thiruvarur,இந்தியா
27-மார்-202320:20:36 IST Report Abuse
chola perarasuஷிமோகாவில் பட்டப்பகலில் ரோட்டில் உங்க ஆளுங்க ஒரு இளைஞரை குடலை வெளியே இழுத்து கொலை செய்தார்களே மறந்து போச்சா? அந்த இளைஞன் என்ன தவறு செய்தான் என்று உங்களால் கூற முடியமா?...
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
23-மார்-202312:45:26 IST Report Abuse
Raa வாங்க ஆபீசர் வாங்க தமிழ் நாட்டுக்கு... இங்கு பலரை உள்ள தள்ள வேண்டியிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X