காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பலி

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. நண்பகல் 12 மணயளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டிருந்த பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து
Blast near Kanchipuram: 7 killed  காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. நண்பகல் 12 மணயளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டிருந்த பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீ வேகமாக பரவி பட்டாசு ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. அப்போது, அங்கு 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். பட்டாசு குடோனில் பலத்த சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


latest tamil news


தகவல் அறிந்து, 2 தீயணைப்பு வாகனத்துடன் வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு படுகாயமடைந்த 7 பெண்கள் உள்ளிட்ட பலர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு கடை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

22-மார்-202315:26:19 IST Report Abuse
அப்புசாமி ஆளுக்கு 5, 10 லட்சம் குடுத்துரலாம். அரசுக்கு கடன் வராமல் என்ன வரும்? பட்ஜெட் போட மட்டும் ...
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
22-மார்-202314:23:14 IST Report Abuse
Raa கொடுமையான சம்பவம். எப்ப தூங்கி எழுந்த நாலு அதிகாரிகள் வருவாங்க பாருங்க "சட்டத்திற்கு புறம்பாக, லைசன்சு இல்லாமல் இயங்கிய.... " "எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இயங்கியதே காரணம்"...... என்பர். அதை ஏன் இவ்வளவு நாள் வெட்டி சம்பளம் வாங்கியும் சோதனை செய்து பிடிக்க வில்லை என்று யாரும் கேள்வி கேட்ட்க மாட்டடோம். எந்த கூத்து நடக்கும் போதே, அரசு, மக்கள் வரிப்பணத்தில் இழப்பீடு ஒன்று அறிவிக்கும், பிறகு அனைவரும் அடங்கி அடுத்த பிரச்சனைக்கு போய் விடுவோம். எத்தனை வருசமா பார்த்துக்கொண்டு இருக்கோம்.....கொடுமையடா சாமி
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
22-மார்-202314:22:08 IST Report Abuse
செல்வம் உண்மையாவே பட்டாசு வெடித்துதான் இப்படி ஆனதா இல்ல மூர்க்கம் வேலையா? ஏன்னா போலீஸ் பொய்யா புளுகுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X