சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் பரிந்துரை

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :தமிழகத்தை சேர்ந்த நான்கு மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளது.நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து வருகிறது.இந்த வகையில், நான்கு மாவட்ட
Nomination of 4 judges to Chennai High Court  சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :தமிழகத்தை சேர்ந்த நான்கு மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளது.


நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து வருகிறது.இந்த வகையில், நான்கு மாவட்ட நீதிபதிகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியம், 2022, ஆக., 10ல் பரிந்துரை அளித்தது. இதற்கு, தமிழக முதல்வர் மற்றும் கவர்னர் ஒப்புதல் அளித்தனர்.


latest tamil news


இதன் அடிப்படையில், தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.இதற்கான தீர்மானம் வெளியிடப்பட்டது. மற்றொரு தீர்மானத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு, மூத்த வழக்கறிஞர் ஹர்பிரீத் சிங் ப்ராரை நீதிபதியாக நியமிக்க கோரி 2022 ஜுலை 25ல் அளித்த பரிந்துரையை மீண்டும் கொலீஜியம் வலியுறுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-202305:06:25 IST Report Abuse
J.V. Iyer நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நடக்கட்டும்.
Rate this:
Cancel
22-மார்-202322:20:46 IST Report Abuse
ஆரூர் ரங் காலிஸ்தான் பிரச்சனை மீண்டும் தலையெடுக்கும் நேரத்தில் கொலீஜியம் , மத்திய சட்ட அமைச்சகம் நல்லெண்ணத்தில் திருப்பியனுப்பிய பரிந்துரைகளை பரிசீலிப்பது தேவையற்றது .
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
23-மார்-202307:31:24 IST Report Abuse
Ellammanஇப்போ காலிஸ்தான் விவகாரம் தலையெடுக்க நேரு வா காரணம்? இல்லை மோடியா?...
Rate this:
jayvee - chennai,இந்தியா
23-மார்-202317:17:12 IST Report Abuse
jayveeஆம ஆத்மி ஆட்சிதான் காரணம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X