புதுடில்லி: பிரதமர் மோடியின் 100-வது மான்கிபாத் நிகழ்ச்சி உலக முழுவதும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார்.
![]()
|
இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம்தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையடுத்து, இந் நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.,முழு அளவில் தயாராகி வருகிறது.
இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறியது, பிரதமர் மோடி உலகளாவிய ஒரு தலைவராக உள்ளார். அவரது பணியை சர்வதேச நாடுகள் பாராட்டுகின்றன. எனவே மான் கி பாத் நிகழ்ச்சியை எவ்வளவு நாடுகளுக்கு முடியுமோ அவ்வளவு நாடுகளுக்கு ஒலிபரப்புவதற்கான நடவடிக்கையை முழு அளவில் செயல்படுத்துவோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement