மோடி பற்றி அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி: 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (121) | |
Advertisement
சூரத்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர்
Surat District Court holds Congress MP Rahul  guilty in the criminal defamation caseமோடி பற்றி அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி: 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்

சூரத்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.


காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது' எனப் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, '' பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது '' என தீர்ப்பு வழங்கினார். மேலும், 10 ஆயிரம் பிணையில் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (121)

vijay - coimbatore,இந்தியா
25-மார்-202315:41:25 IST Report Abuse
vijay ராகுல் எல்லாம் திருந்தற மாதிரியான ஆள் இல்லை. இதை வைத்து தான் யோக்கியன் மாதிரி பேசி மக்களை ஏமாற்றி அனுதாபம் பெற முயற்சி ஏற்கனவே ஆரம்பிச்சுட்டார். மக்கள் முதலில் ராகுல் எதற்காக வழக்கில் தண்டனை பெற்றார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். பிரதமர் மோடி-ஐ திட்டுவதாக எண்ணிக்கொண்டு ஒட்டுமொத்த "மோடி" என்ற சமூகத்தையே "திருடர்கள்" எல்லாம் "மோடி" என்ற பெயர் இருக்கிறதே என்று பேசினார். நீரவ் மோடி, லலித் மோடி என்ற இருவருக்கும் கடன்கள் அள்ளிக்கொடுத்தது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான். ஆனால் தப்பிசென்றது 2014 -க்கு பிறகு "நரேந்திர மோடி" ஆட்சியில் மாற்றுவோம் என்பதால். அவர்களை இந்தியா கொண்டுவர பல தடங்கல்கள் இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்து போன்ற சட்டம்தான் இந்தியாவிலும் உள்ளது.
Rate this:
Cancel
ச. ராமச்சந்திரன் - Chennai ,இந்தியா
25-மார்-202312:09:54 IST Report Abuse
ச. ராமச்சந்திரன் ஒன்று புரியவில்லை. இதே பேச்சுக்கு பாட்னா கோர்ட் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கி உள்ளது. சூரத் கோர்ட் தண்டனை அளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பிறகு என்ன அப்பீல் செய்து வெளிவரவேண்டியதுதானே......அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை ஆயிற்றே.
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
29-மார்-202308:06:10 IST Report Abuse
Dharmavaanஇதை வைத்து பச்சாதாபம் தேட நினைக்கிறார் ராகுல்...
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
23-மார்-202323:57:21 IST Report Abuse
Priyan Vadanad எல்லோருக்கும் கொஞ்சம் பொறுமையும் விமர்சனங்களை தாங்கும் சக்தியும் கண்டிப்பாக வேண்டும். இந்த ஒரு சம்பவத்தால், இங்கு பதிவிடுபவர்களின் மனப்பாங்கும் சரியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X