செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் 'கடலை புண்ணாக்கு கரைசல்'..!

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | |
Advertisement
நமது பாரம்பரியத்துடன் ஒன்றி இருக்கும் எண்ணெய் வித்துகளை பிரித்தால் அது முழுமை ஆகாது. சமையலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு, மட்டுமல்லாமல் நாம் மலைப்போல் நம்பி இருக்கும் மண்ணுக்கும் ஏராளமான நன்மைகளை இந்த எண்ணெய் வித்துக்கள் அளிக்கின்றன. குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கும், செடி மற்றும் மரங்களின் ஆரோக்கியத்திற்கும் அதீத பலனை அளிக்கும் என்றால் மிகையாகது.
Peanut punnaku solution to promote the growth of plants..!  செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் 'கடலை புண்ணாக்கு கரைசல்'..!

நமது பாரம்பரியத்துடன் ஒன்றி இருக்கும் எண்ணெய் வித்துகளை பிரித்தால் அது முழுமை ஆகாது. சமையலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு, மட்டுமல்லாமல் நாம் மலைப்போல் நம்பி இருக்கும் மண்ணுக்கும் ஏராளமான நன்மைகளை இந்த எண்ணெய் வித்துக்கள் அளிக்கின்றன.

குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கும், செடி மற்றும் மரங்களின் ஆரோக்கியத்திற்கும் அதீத பலனை அளிக்கும் என்றால் மிகையாகது. அப்படிப்பட்ட எண்ணெய் வித்துகளிலில் ஒன்றாக கடலையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கடலை புண்ணாக்கு மண்ணுக்கும், மரங்களுக்கும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.


latest tamil news

இயற்கை விவசாயத்திற்கு, கடலை புண்ணாக்கு கரைசல் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கடலை புண்ணாக்கு கரைசல் பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும், மண்ணின் வளத்தையும் பாதுகாக்கிறது.


தேவையான பொருட்கள்


கடலை புண்ணாக்கு - 50கிராம் கிலோ


நாட்டுசர்க்கரை - 50கிராம்

தேங்காய் - 1.2 மூடி

கனிந்த வாழைப்பழம் - 1

தண்ணீர் - 1லிட்டர்


செய்முறை


latest tamil news

தேங்காயை உடைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில், வாழைப்பழம், தூளாக்கிய கடலை புண்ணாக்கு, நாட்டுச் சர்க்கரை, தயிர், அரைத்த தேங்காய், 1லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அடுத்து காற்றுப்புகாத அளவிற்கு பிளாஸ்டிக் கவரால், பக்கெட்டை கட்டி நிழலான இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும்.


24 மணிநேரம் கழித்து பக்கெட்டை திறந்து அதனுடன், 5லிட்டர் தண்ணீர் சேர்த்து செடி, மரங்களுக்கு மாலை நேர்த்தில் தெளிக்க வேண்டும். இந்த கரைசலை 2,3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.


latest tamil news

இந்த கரைசலை தெளிப்பதன் மூலம் செடி, மரங்கள் வளரச்சி அதிகரிக்கும். காய்க்கும் திறன் அதிகரிப்பதோடு, சத்தான காய்கறி, பழங்களை பெறலாம். இந்த கரைசலை அடிகடி பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரித்து செடிகள் செழித்து வளரும். குறிப்பாக மாடித்தோட்டங்களிலும் இந்த கரைசலை பயன்படுத்தலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X