சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் பலி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கி.மீ தூரத்திற்கு 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.




latest tamil news


அவர் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கி.மீ தூரத்திற்கு 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.



latest tamil news


இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர். சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

PRAKASH.P - chennai,இந்தியா
23-மார்-202323:54:51 IST Report Abuse
PRAKASH.P Why can not develop more smaller trains and increase frequency of them between districts and states so people do use more trains rather road transports. Similar how metro trains are running inside metro cities we can make them more usefull for indian railways. Increase number of ralilway tracks rather investing more highways
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-மார்-202322:19:50 IST Report Abuse
g.s,rajan எல்லாத்துக்கும் நேரு தான் காரணம் ....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-மார்-202321:59:20 IST Report Abuse
g.s,rajan சாலைகள் தரமாக இருப்பதால் தான் விபத்துக்கள் உயிரிழப்புக்கள் அதிகம் நடக்கிறது என்று ஒரு பா.ஜ.க எம் எல் ஏ அண்மையில் திருவாய் மலர்ந்து அருளினார் அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை .இதைத் தவிர மற்றொரு குற்றவாளி மத்திய மற்றும் மாநில அரசாங்கம் ஏனென்றால் எரிபொருளுக்கு இந்தியாவில் ஏகப்பட்ட வரி விதித்து வாகனத்தயாரிப்பாளர்கள் சோப்பு டப்பா வாகனங்களைத் தயாரிக்க வழி வகுக்கின்றனர் ,வாகனத்தயாரிப்பாளர்களும் அதிக மைலேஜ் தருவதற்காக வாகனங்களின் எடையைக் குறைத்து வாகனச் சந்தையில் விற்கின்றனர் .எடை குறைந்த உறுதியற்ற வாகனங்கள் மிக வேகமாகச் சென்று விபத்தில் சிக்கும் பொழுது வாங்கனங்கள் முட்டைக்கூடு போல சுக்கு நூறாக நொறுங்கி விடுவதால் வாகனத்தில் பயணிக்கும் மக்கள் விபத்துக்களில் சிக்கி கூண்டோடு கைலாசம் செல்கின்றனர் ,விபத்துக்களில் சிக்கி உடலுறுப்புக்களையும் இழந்து பலர் உடல் ஊனம் ஆவதும் தொடர் கதையாகிவிட்டது .அதிவேகமாகச் செல்வதாலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாலும் ,போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் ,தூக்கம் கெடுவதாலும் மற்றும் ஓய்வு எடுக்காமல் தொடர் பயணம் செய்யும் அசதியாலும்,திட்டமிடாமல் பயணம் செய்வதாலும் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன .அதிவேகமாகச் சென்று விபத்துக்களில் சிக்குவதும் பல உயிர் இழப்புக்களுக்கு மிக மிக முக்கியக் காரணம்.வளைவுகளில் முந்துவது மிகவும் தவறான ஒன்றாகும் . கவனக்குறைவு ,அசட்டுத் துணிச்சல் ,இறுமாப்பு ,அலட்சியம் .சுயநலம் ,முரட்டுத்தனம்,வாகனத்தின் போக்கை கணிக்கத் தவறுவது போன்றவற்றால் உயிர் இழப்புக்கள் ,உடல் உறுப்புக்களின் இழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்கு உரிய ஒன்றாகும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X