வாழை இலை போட்டு சாப்பாடு சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். இப்படியெல்லாம் தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், வாழை இலையில் அல்வா அப்படிங்குறது கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆம், அதுவும் இரண்டே இரண்டு வாழை இலை இருந்தா போதும். சூப்பரா நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான அல்வா செய்யலாம். எப்படின்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழை இலை - 2
சோள மாவு - ¼
கப் சர்க்கரை - ¼ கப்
முந்திரி - 10
பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை
![]()
|
இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில், மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும். வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
![]()
|