ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,களுக்கு திடீர் அரசியல் ஆர்வம் ஏன்?
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,களுக்கு திடீர் அரசியல் ஆர்வம் ஏன்?

எக்ஸ்குளுசிவ் செய்தி

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,களுக்கு திடீர் அரசியல் ஆர்வம் ஏன்?

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
தமிழகத்தைச் சேர்ந்த பலர், வட மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலருக்கு, எம்.பி.,யாக வேண்டும் என்ற ஆசை இருப்பது தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, தமிழக பா.ஜ., தலைவராகி இருக்கும் அண்ணாமலையின் வளர்ச்சி, பிற ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம், இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, வட
Why the sudden political interest of IAS, -- IPS?  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,களுக்கு திடீர் அரசியல் ஆர்வம் ஏன்?

தமிழகத்தைச் சேர்ந்த பலர், வட மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலருக்கு, எம்.பி.,யாக வேண்டும் என்ற ஆசை இருப்பது தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, தமிழக பா.ஜ., தலைவராகி இருக்கும் அண்ணாமலையின் வளர்ச்சி, பிற ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம், இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


குறிப்பாக, வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலருக்கும், இந்த எண்ணம் உள்ளது. இதற்காக, தி.மு.க., -- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை அணுகி வருகின்றனர். அந்த அதிகாரிகளுக்காக, டில்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் முயற்சி எடுத்து வருகிறார்.

இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:படிக்காதவர்களை டில்லிக்கு அனுப்பி, பார்லிமென்ட் விவாதங்களில் அவர்கள் தெளிவான கருத்துக்களை எடுத்து வைக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.இதை தவிர்க்க, நன்கு படித்தவர்களையும், சமூகத்தில் அந்தஸ்தான இடத்தில் இருப்பவர்களையும் எம்.பி.,க்களாக்க வேண்டும் என, தமிழக கட்சிகளின் தலைமை விரும்புகின்றன.இதை அறிந்துள்ள வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கட்சிகளில் இணைந்து, 'சீட்' பெற்று தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.
தி.மு.க.,வை பொறுத்த வரை, கட்சியில் இணைந்து தேர்தலில் சீட் பெற வேண்டும் என்றால், கட்சி வளர்ச்சிக்கு பெரும் தொகையை நிதியாக தர வேண்டும் என கூறி விட்டனர். இதனால், அவர்கள் அ.தி.மு.க.,வில் இணைய முயற்சிக்கின்றனர்.

இவர்களுக்காக, டில்லியில் இருந்து தமிழகம் வந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், சேலத்தில் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். 'எத்தனை பேர் வேண்டுமானாலும் இணையட்டும். அது கட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும். அதே நேரம், எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாது; ஓரிருவருக்கு மட்டும் கொடுக்க முடியும். அதிலும் யாருக்கு என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
'கட்சி வளர்ச்சிக்கு பணம் வேண்டாம். தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கப்படும்' என, பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரியாக செயல்பட்டவர்களும் அரசி யலுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, மலைச்சாமி, நட்ராஜ் போன்றோரை கட்சியில் இணைத்து, சீட் கொடுத்தார் ஜெயலலிதா.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சந்தோஷ்பாபு, ஏ.ஜி.மவுரியா உள்ளிட்டோர் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டனர். இந்த விஷயத்தில் ஜெயலலிதா வழியில் செயல்பட பழனிசாமி விரும்புகிறார். டில்லி பத்திரிகையாளர் முயற்சி வெற்றி பெற்றால், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், வட மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றும்
தமிழர்களில் சிலர், அ.தி.மு.க.,வில் இணைவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. -- நமது நிருபர் --


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

Ellamman - Chennai,இந்தியா
24-மார்-202308:22:16 IST Report Abuse
Ellamman சி பி ஐ பயம் இல்லாமல் பணக்காரர்கள் ஆவது எப்படி என்று அண்ணாமலை கற்றுக்கொடுத்திருக்கிறார். சங்கல்ப் அகடெமியில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
24-மார்-202308:14:49 IST Report Abuse
Rajarajan அரசு உயர்பதவியில் நல்ல சம்பளம், சலுகைகள், வசதிகள், வாய்ப்புகள், ஓய்வூதியம் வாங்கிய பின்னர், அவற்றை விட முடியாமல் மனம் தவிக்கும். எனவே அரசு உயர் அதிகாரிகள், சினிமா நடிகர்கள், அதிகார போதையை விரும்பும் மனங்கள், ஏற்கனவே MLA / MP / அமைச்சர்களாக இருப்பவர்கள், விரைவில் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் உயரிய நிலையை அடைய நினைப்பவர்களின் ஒரே வரப்பிரசாதம், அரசியல் மட்டுமே. இதைவிடுத்து, மக்கள் சேவை, இடியாப்பம் என்று இவர்கள் சொல்வது எல்லாம் கம்பி கட்டும் கதை.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மார்-202304:00:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, தமிழக பா.ஜ., தலைவராகி இருக்கும் அண்ணாமலையின் வளர்ச்சி... சுவாசம் அறக்கட்டளை மூலம் மரக்கன்று விற்று ஆயிரம் கோடி வசூலித்த சுனாமி வளர்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X