தூதரகத்துக்கு பாதுகாப்பு:  பிரிட்டன் அமைச்சர் உறுதி
தூதரகத்துக்கு பாதுகாப்பு: பிரிட்டன் அமைச்சர் உறுதி

தூதரகத்துக்கு பாதுகாப்பு: பிரிட்டன் அமைச்சர் உறுதி

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
லண்டன்: லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி உறுதி அளித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்குள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இங்கிருந்த நம் தேசியக் கொடியை அகற்றினர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

லண்டன்: லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி உறுதி அளித்தார்.



latest tamil news


ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்குள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இங்கிருந்த நம் தேசியக் கொடியை அகற்றினர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய துாதரகத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்; சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இருந்தும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு எதிராகவும், சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டும் அவர்கள் கோஷமிட்டனர்.


இந்தப் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் துாதரகத்தில் பல இடங்களில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டன. சுவர்கள், ஜன்னல்களிலும், மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டன.



latest tamil news

இது குறித்து, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கூறியுள்ளதாவது: இந்தியா - பிரிட்டன் இடையே சிறப்பான உறவு உள்ளது. அதை மதிக்கும் வகையில், இந்தியத் துாதரகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோர் அமைதியான முறையில் செயல்பட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.


துாதரகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக, பிரிட்டனுக்கான இந்திய துாதர் விக்ரம் துரைசாமி, இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரிகளுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Murali - Bangalore,இந்தியா
24-மார்-202316:33:51 IST Report Abuse
Murali Strict against criminals to be taken
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-மார்-202313:04:15 IST Report Abuse
Ramesh Sargam பிரிட்டன் செயற்கைக்கோளுடன் பாயும் இந்திய ராக்கெட்... இப்படி இந்தியா பிரிட்டன் அரசுக்கு உதவுகிறது. Of course, பணம் பெற்றுக்கொண்டு. ஆனால், லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்கு பிரிட்டன் அரசு முறையான பாதுகாப்பு அளிக்காதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X