பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம்: 'டெடா' நிறுவனம் மூடப்படுமா!

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை-'பசுமை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, சிறப்பு நிறுவனம் உருவாக்கப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பணிகளை ஏற்கனவே மேற்கொள்ளும், 'டெடா' நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 'டெடா' என்ற தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, 1984ல் துவக்கப்பட்டது.காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'பசுமை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, சிறப்பு நிறுவனம் உருவாக்கப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பணிகளை ஏற்கனவே மேற்கொள்ளும், 'டெடா' நிலை கேள்விக்குறியாகி உள்ளது.



latest tamil news


'டெடா' என்ற தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, 1984ல் துவக்கப்பட்டது.

காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, டெடா மேற்கொள்கிறது.

மேலும், தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் பயனாளிகளுக்கு, மத்திய அரசு மானியத்தை பெற்று தரும் பணியையும் செய்தது. தற்போது மத்திய அரசு, பயனாளி வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகையை செலுத்துகிறது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான இந்நிறுவனத்தில் 50 பேர் வரை நிரந்தரமாக பணிபுரிகின்றனர். தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 31 உதவி பொறியாளர்கள், 17 இளநிலை உதவியாளர்கள், சமீபத்தில் மின் வாரியத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், 'வரும் 2030க்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதம் மேல் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு இருக்கும் வகையில், பசுமை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்து, நிதித் துறை செயலர் முருகானந்தம் கூறியதாவது:

டெடாவின் வேலை நோக்கம் குறைவாக உள்ளது. அதிக பணியாளர்கள் கூட இல்லை; அதன் செயல்பாடும் குறுகியதாக உள்ளது.

அதேசமயம், பசுமை மின்சாரத்தில், தமிழகம் மிக முக்கிய வளம் நிறைந்த மாநிலமாக உள்ளது. எனவே, அதற்கு தனி கவனம் செலுத்த எரிசக்தி துறையின் கீழ், ஒரு சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. அந்நிறுவனத்துடன், டெடா இணைக்கப்படலாம்; அதுபற்றி எரிசக்தித் துறை முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Ramesh - Chennai,இந்தியா
24-மார்-202308:48:44 IST Report Abuse
Ramesh வீடுகளுக்கான சூரிய சக்தி மின்உற்பத்தியை மக்கள் பயன்படுத்த போவதில்லை. ஏனெனில் மின்சார வாரிய ஊழியர்களின் அட்டூழியம். லஞ்சம் தலைக்கு மேல் கொடுக்காமல் எந்த அனுமதியையும் தரமாட்டார்கள். அது மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-மார்-202306:40:51 IST Report Abuse
raja மின்சாரத்தில் தான் கொள்ளை அடிக்க முடியும் என்று விடியல் சார் திட்டம் போட்டு அணிலுடன் கூட்டணி வைத்து இரண்டு வருடம் ஆகிவிட்டது... இதுவே லேட்டுன்னு உடன் பிறப்புகள் சொல்லரானுவோ...
Rate this:
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
24-மார்-202305:49:28 IST Report Abuse
Gajageswari பசுமை மின்சாரத்திற்கு தனி அமைப்பு தேவையில்லை. Wind-Solar hybrid tem அனுமதி அளித்தால் போதும். ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X