பிரதமரின் உரைகள் அடங்கிய புத்தகம்: 'மதரசா' மாணவர்களுக்கு வழங்க முடிவு

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
லக்னோ : பிரதமர் மோடியின் முக்கிய உரைகளை உருது மொழியில் மாற்றம் செய்து, புத்தகமாக அச்சிட்டு, 'மதரசா' மாணவர்களுக்கு வழங்க உத்தர பிரதேச மாநில பா.ஜ., முடிவு செய்துள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இம்மாநில பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் கன்வர் பஷித் கூறியதாவது:பிரதமர் மோடி, ஒவ்வொரு
Book of Prime Ministers Speeches: Decision to Distribute Madrasa to Students   பிரதமரின் உரைகள் அடங்கிய புத்தகம்: 'மதரசா' மாணவர்களுக்கு வழங்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ : பிரதமர் மோடியின் முக்கிய உரைகளை உருது மொழியில் மாற்றம் செய்து, புத்தகமாக அச்சிட்டு, 'மதரசா' மாணவர்களுக்கு வழங்க உத்தர பிரதேச மாநில பா.ஜ., முடிவு செய்துள்ளது.


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இம்மாநில பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் கன்வர் பஷித் கூறியதாவது:


பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை, 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழில் மனதின் குரல் என அழைக்கப்படுகிறது.


latest tamil news

இந்த நிகழ்ச்சி வாயிலாக, அன்றாட நிகழ்வுகள், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆலோசனை போன்றவற்றை பிரதமர் வழங்கி வருகிறார். பிரதமரின் இந்த உரைகளை உருது மொழியில் மாற்றம் செய்துள்ளோம். இவற்றை புத்தகமாக அச்சிட்டு, உ.பி.,யில் உள்ள மதரசா எனப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத் தரும் பள்ளி மாணவர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம்.


ரம்ஜான் பண்டிகை அன்று புத்தக வினியோக பணியை துவக்கவுள்ளோம். பிரதமரின் கருத்துக்களை இஸ்லாமிய மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காவே இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

NALAM VIRUMBI - Madurai,இந்தியா
24-மார்-202311:05:11 IST Report Abuse
NALAM VIRUMBI அருமை
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-மார்-202309:00:30 IST Report Abuse
sridhar ஏன், கோவைசா , மதுரைசா , நெல்லைசா , தஞ்சைசா வுக்கெல்லாம் கிடையாதா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X