பெண்களின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? சீமான் கேள்வி

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
திருச்சி: ''தாய் மற்றும் சகோதரிகளின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? எதை வைத்து, தகுதியை தீர்மானிக்கிறீர்கள்,'' என்று சீமான் தெரிவித்தார்.கடந்த 2018ம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில், ம.தி.மு.க.,வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, அந்த
Who are you to judge womens worth? Seaman Question  பெண்களின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: ''தாய் மற்றும் சகோதரிகளின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? எதை வைத்து, தகுதியை தீர்மானிக்கிறீர்கள்,'' என்று சீமான் தெரிவித்தார்.


கடந்த 2018ம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில், ம.தி.மு.க.,வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, அந்த வழக்கு விசாரணைக்காக, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.


அதன் பின், அவர் அளித்த பேட்டி: போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து தாக்கிய எல்லாம் பொது சொத்து சேதப்படுத்துவதில்லை. போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தியவர்களை, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யவில்லை. ஏதோ பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்து, கைது செய்ததாக காட்டியுள்ளனர்.


ஜனநாயகம் என்பது, பேச்சளவில் மட்டுமே உள்ளது. ஆட்சியில் இருப்பதால், எதிர்ப்பு கருத்து தெரிவிக்க கூடாது என்பது சரியல்ல. எதிர்ப்பு கருத்து பதிவு செய்பவர்களை, கேலிச்சித்திரம் வரைபவர்களை சிறையில் அடைப்பது கொடுமையானது.


latest tamil news

என் தாய் மற்றும் சகோதரிகளின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? எதை வைத்து, தகுதியை தீர்மானிக்கிறீர்கள். தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமத் தொகை கொடுப்போம், என்று கூறினீர்கள். பொதுத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர், உங்களை வெற்றி பெற வைக்கவில்லை. நாங்கள் தான் வெற்றி பெற வைத்திருக்கிறோம். இன்று, ஆட்சியில் இருக்கும் நாற்காலி, நாங்கள் கொடுத்தது.


ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நாங்கள், காசு கொடுக்க முடியாது; கொடுக்கவும் மாட்டோம். எட்டு சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் நாங்கள், 15 சதவீதம் ஓட்டு பெறும் போது, மக்களே வெற்றி பெறும் கட்சியின் பக்கம் சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவார்.


பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக, ராகுலுக்கு தண்டனை கொடுத்திருப்பது வேடிக்கை. மாற்று வருவாய் பற்றி சிந்திக்காமல், டாஸ்மாக் விற்பனையில் இலக்கு நிர்ணயிப்பது, கூடுதலாக இன்னும் குடிகாரர்களை உருவாக்குவதாக அர்த்தம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

Duruvesan - Dharmapuri,இந்தியா
24-மார்-202318:13:10 IST Report Abuse
Duruvesan அண்ணன் நியூஸ் எல்லாம் படிக்க மாட்டாரு, சும்மா அடிச்சி விடுவார், இவர் ஓட்டை பிரிச்சதுனால தான் தீயமுக ஆட்சிக்கு வந்துச்சாம், சீமான் அண்ணே விடியல் சார் முன்னாடி நீங்க ஒரு தூசி மாதிரி, தெம்பு இருந்தா கொளத்தூர்ல நின்னு டெபாசிட் வாங்கி காட்டுங்க பார்க்கலாம், சும்மா பீலா வுட்டுனு தெரியறதே பொழப்பா போச்சி
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
24-மார்-202317:52:19 IST Report Abuse
Priyan Vadanad மோடி என்கிற சமூகமே திருடர்கள் என்று அவர் குறிப்பிடுவதாக ஒருசிலர் பதிவிடுகிறார்கள். அது மிகவும் தவறான வாதம். ராகுலின் தண்டனை கண்டிப்பாக பிரதமரை கிண்டல் செய்ததற்காகத்தானே தவிர வேறு எதற்கும் அல்ல.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
24-மார்-202315:02:46 IST Report Abuse
Chakkaravarthi Sk சைமன் அவர்களே, மோடி என்கிற பெயரை ஒரு இனக்குழு தம்மை அடையாளப்படுத்த உபயோகிக்கிற பெயர். ராகுல் என்ன சொன்னார்? இல்லாதிருடர்களின் பெயரும் மோடி என்று. ஆகவே மோடி என்ற குடும்ப பெயர் கொண்ட அனைவருக்கும் நீதி வேண்டியே இந்த வழக்கு நடந்தது. என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டாள் பின் விளைவுகள் வரும் பொழுது ஏற்றுக்கொள்ளாது தானே நீங்கள் சொல்லும் வீரமும் தன மானமும் வேண்டுமென்றால் மன்னிப்பு கேட்கட்டும். நான் தான் அப்படி பேசினேன். எல்லாரும் மன்னியுங்கள் என்று முறையிடட்டும். அந்த மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது போல நடக்கட்டும் நீங்கள் ஏன் ஆதங்க படுகிறீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X