கூட்டணியில் குழப்பம் இல்லை, தேசிய தலைமையே இறுதி முடிவெடுக்கும்: அண்ணாமலை

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
மதுரை: ‛அதிமுக உடனான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.எந்தவொரு எம்.பி.,க்கும் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டால்
No confusion in alliance, national leadership will take final decision: Annamalai  கூட்டணியில் குழப்பம் இல்லை, தேசிய தலைமையே இறுதி முடிவெடுக்கும்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: ‛அதிமுக உடனான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.எந்தவொரு எம்.பி.,க்கும் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டால் அவருடைய பதவி ‛சஸ்பெண்ட்' ஆகும் என்பது விதி.

அப்படியிருக்கையில் வேண்டுமென்றே அவரது பதவியை பறிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் திசை திருப்புகிறது. சமீபத்தில் லண்டன் சென்றபோதும் ராகுல், ஜனநாயகம் பற்றி அவதூறாக பேசினார்.


latest tamil news


கூட்டணி


தமிழகத்தில் பா.ஜ.,வை வலுப்படுத்துவதே நோக்கம். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பா.ஜ., வளர வேண்டும். பா.ஜ., தலைவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை. பா.ஜ., வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம்.

கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. கட்சியை வலுப்படுத்த நினைக்கும்போது சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம்தான். பா.ஜ.,வுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி தலைவர்கள் மீது மோதல் இல்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும்.


அரசை கேலி செய்யும் மீம்கள், வீடியோக்களுக்காக எல்லாம் திமுக அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. மணீஷ் சிசோடியா கைதின்போது, ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ., நசுக்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அப்படி இருக்கையில், ராகுல் மீதான தீர்ப்புக்கு இவர்கள் (ஸ்டாலின்) ஜனநாயகம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மார்-202317:48:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அந்தர்பல்டி அண்டாமலை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202316:57:24 IST Report Abuse
Kasimani Baskaran அதிமுகவை முடித்து வைக்க கூடுதல் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்... அவ்வளவுதான்...
Rate this:
Cancel
Venkatesan.v - Chennai,இந்தியா
24-மார்-202316:37:50 IST Report Abuse
Venkatesan.v Waiting for your tomorrow's statement
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X