மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட்
மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட்

மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட்

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு
Brain haemorrhage: Singer Bombay Jayashree admitted to London hospital  மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட்

லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு முன் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார்.

அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மெல்ல குணமாகி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
25-மார்-202306:29:58 IST Report Abuse
Naagarazan Ramaswamy பம்பாய் ஜெயஸ்ரீ உடல் நலம் பெற்று குணமடைந்து அவரது தைவீக குரலால் மக்களை மகிழ்விக்கவேண்டி வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
24-மார்-202322:04:46 IST Report Abuse
adalarasan கூடிய சீக்கிரம் குணமடைந்து,இந்த வருடம்,,, அகெடமி சங்கீத கலாநிதி விருதை, பெற்று,கச்சேரியும் செய்வார் என்று நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்{
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-மார்-202320:20:59 IST Report Abuse
Ramesh Sargam பாம்பே ஜெயஸ்ரீ கூடிய சீக்கிரம் பூரண குணமடைந்து மீண்டும் பாட துவங்கவேண்டும். பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X