மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருமெய்ஞானம் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்தின் பிரம்மன் உயிர் பெற்ற தலமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (மார்ச் 24) கோவிலில் அசுபதி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். இந்த நீர் காசிக்கு இணையாக புனித நீராக கருதப்படுகிறது.
பசுபதி தீர்த்தவாரியை முன்னிட்டு அசுர தேவருக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. பூஜைகளை ராமலிங்கம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.