ராகுல் தண்டனைக்கும் பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் கிடையாது: எச்.ராஜா

Added : மார் 24, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
காங்கேயம்: காங்கேயம் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் சொல்வதற்கும் அரசாங்கம் செயல்படுத்துவதற்கும் எந்தவிதமான உண்மையும் இல்லை. பெயருக்கு பட்ஜெட் வாசிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டுறவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் இந்த
Rahuls punishment has nothing to do with BJP: H.Raja  ராகுல் தண்டனைக்கும் பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் கிடையாது: எச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காங்கேயம்: காங்கேயம் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில் சொல்வதற்கும் அரசாங்கம் செயல்படுத்துவதற்கும் எந்தவிதமான உண்மையும் இல்லை. பெயருக்கு பட்ஜெட் வாசிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டுறவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் இந்த வருடம் கூட்டுறவுக்கு எதுவும் நிதி ஒதுக்கவில்லை. மொத்தத்தில் மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.


பிரசாரத்தில் ராகுல், நிரவ் மோடியை திட்ட வேண்டும் என்பதற்காக மோடி எனும் சமுதாயத்தினர் எல்லாம் பிராடு என பேசினால் அந்த சமுதாயத்தில் இருந்த ஒரு பெரியவர் அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.

இது பா.ஜ., அரசாங்கம் போட்ட வழக்கு அல்ல, குஜராத் அரசாங்கம் போட்ட வழக்கு அல்ல, பா.ஜ., நபர்கள் போட்ட வழக்கு அல்ல, மோடி என்ற சமுதாயத்தை இழிவு படுத்தியதற்காக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் போட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை கொடுத்துள்ளது.

இதில் பா.ஜ.,விற்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அப்படி கெட்டார் ராகுல். இவ்விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-202307:18:40 IST Report Abuse
venugopal s நீங்கள் குறைந்தது இரண்டு வருடங்கள் சிறை தண்டனை என்று தீர்ப்பு மட்டும் கொடுத்தால் போதும் மற்றவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம், என்று மட்டும் தான் டீலிங்கா?
Rate this:
Cancel
25-மார்-202307:13:01 IST Report Abuse
N SASIKUMAR YADHAV அப்ப தமிழகத்தில் பிராமணர்களை திட்டுவதையே தொழிலாக கொண்ட சில சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது வழக்கு போட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும் அந்த தொகுதிகளுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை போல இடைத்தேர்தலும் வர வாய்ப்புண்டு . ஆனால் வழக்கு விரைவில் முடியவேண்டுமே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மார்-202305:34:40 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்தில் மழைபெய்தாலும், பெய்யாவிட்டாலும், பேருந்து வந்தாலும் வராவிட்டாலும் மோடிஜிமீது குற்றம் சொன்ன ஊடகங்கள் இனிமேல் எல்லாவற்றிக்கும் பாஜக மத்திய அரசின்மீது பழிபோடும். வேறு என்ன சொல்வார்கள்? திருடன் எப்போது தன்னை திருடன் என்று ஒத்துக்கொண்டிருக்கிறான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X