புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கேஸ் மானியம் ரூ.200 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
![]()
|
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.2023 ஜனவரி .1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் மு டிவு செய்யப்பட்டு உள்ளது. அகவிலைப்படி உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 ஓய்வூதியர்களும் பயன்பெறுவர் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
![]()
|
கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு
பிரதமரின் உஜ்வாலா திட்டதின் கீழ் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான, ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கான மானியம் மட்டும் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மானியம் அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement