லண்டன்: பிரான்சில், ஒய்வூதிய திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது பிரான்ஸ் பயணத்தை ஒத்தி வைத்தார்.
பிரான்சில், மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒய்வூதிய திட்டத்தை அரசு நிர்வாகம் அமல்படுத்தியது. இதற்கு அரசு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் நடந்தன. இதனால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் அரசு முறைப்பயணமாக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மார்ச்.26 முதல் 28 வரை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார் .தற்போது அவரது பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பிரிட்டன் அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டிக்டாக்கிற்கு தடை
முன்னதாக பிரான்ஸ் அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரான்சில் சீன தயாரிப்பு செயலியான டிக்டாக்கை அரசு ஊழியர்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.