அம்ரித்பால் தப்பாமல் இருக்க எச்சரிக்கை 'போஸ்டர்'கள்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், உ.பி., வழியாக நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க, எல்லையில் துணை ராணுவப் படையினரால் எச்சரிக்கை 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன. பஞ்சாபில் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், சமீபத்தில் தன் கூட்டாளிகளுடன் சென்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, தலைமறைவாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், உ.பி., வழியாக நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க, எல்லையில் துணை ராணுவப் படையினரால் எச்சரிக்கை 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன.



latest tamil news


பஞ்சாபில் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், சமீபத்தில் தன் கூட்டாளிகளுடன் சென்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், அம்ரித்பால் மற்றும் இவரின் கூட்டாளிகள், நம் அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் வழியாக நேபாளம் தப்பி விடாமல் இருக்க, இங்குள்ள சாஷாஸ்திரா சீமா பால் எனப்படும் துணை ராணுவத்தினர், அம்ரித்பால் புகைப்படம் அடங்கிய போஸ்டர்களை எல்லை பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

எல்லையில் வாகனங்களை ஆய்வு செய்யும் வீரர்கள், அம்ரித் பாலின் புகைப்படத்துடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

nv -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-202309:31:57 IST Report Abuse
nv AAP இவனுக்கு புகலிடம் குடுக்கிறது.....
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
25-மார்-202308:08:14 IST Report Abuse
Fastrack பஞ்சாப் போலீஸ் ஏற்கனவே கஸ்டடியில் வைத்துள்ளதாக தந்தை பேட்டி கொடுத்திருக்கிறார்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மார்-202305:32:09 IST Report Abuse
J.V. Iyer அவன் இருக்குமிடம் பஞ்சாப் போலீசுக்கு தெரியாதா என்ன? ஆம் ஆத்மீ கட்சி அவனுக்கு அடைக்கலம் அளித்திருக்கிறது.
Rate this:
Muthu - Nagaipattinam,இந்தியா
25-மார்-202307:54:16 IST Report Abuse
Muthuஉங்கள் கூற்றில் உண்மை இருக்கலாம்......
Rate this:
Muthu - Nagaipattinam,இந்தியா
25-மார்-202307:55:40 IST Report Abuse
Muthuகெஜ்ரிவால் ன் வலது கை ஆள் தான் இவன். கெஜ்ரிவாலை பிடித்து கொஞ்சம் பிதுக்கினால் உடனே இவனை கைது செய்வார்கள். நடக்குமா??...
Rate this:
Muthu - Nagaipattinam,இந்தியா
25-மார்-202307:57:43 IST Report Abuse
Muthuநாடு முன்னேற இதுபோன்ற தீய சக்திகள் தடையாக உள்ளது. எனவே பிடித்ததும் முடிப்பது நல்லது. கோர்ட், கேஸ், இழுத்து வந்தால் இவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்கி தப்பித்து விடுவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X