பிரதமர் மீது அவதுாறு வழக்கு ரேணுகா சவுத்ரி திடீர் முடிவு

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (37) | |
Advertisement
புதுடில்லி-''ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை கதாபாத்திரத்துடன் என்னை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என, காங்., மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துஉள்ளார். பிரதமர் மோடியைப் பற்றி அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-''ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை கதாபாத்திரத்துடன் என்னை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என, காங்., மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துஉள்ளார்.



latest tamil news


பிரதமர் மோடியைப் பற்றி அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இதையடுத்து, அவரை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, லோக்சபா செயலகம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், காங்., மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளதாவது:

கடந்த, 2018ல் பார்லிமென்டில் பேசிய பிரதமர் மோடி, ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் என் சிரிப்பை ஒப்பிட்டு பேசினார்; இதுவும் அவதுாறு தான்.


latest tamil news


இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கில் நீதிமன்றம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

sankar - chennai,இந்தியா
27-மார்-202315:32:27 IST Report Abuse
sankar பாராளுமன்றத்தில் என்ன கேட்ட வார்த்தைகளோ அசிங்கமான பேச்சுகளோ இடம் பெற்றால் அதை ஸ்பீக்கர் இடம் முறையிட வேண்டும்
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
27-மார்-202304:45:12 IST Report Abuse
srinivasan வால்மிகி, கம்பர், விஸ்வாமித்திரர் அடங்கிய உச்ச நீதி மன்ற பெஞ்ச் சூர்பனகையை விசார்த்து 5000 வாரங்களுக்குள் தீர்ப்பை கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
25-மார்-202321:21:04 IST Report Abuse
Gnanam மோடி சொன்னது புரியுறதுக்கே இதனை ஆண்டுகளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X