வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-''ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை கதாபாத்திரத்துடன் என்னை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என, காங்., மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துஉள்ளார்.
![]()
|
பிரதமர் மோடியைப் பற்றி அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
இதையடுத்து, அவரை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, லோக்சபா செயலகம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், காங்., மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளதாவது:
கடந்த, 2018ல் பார்லிமென்டில் பேசிய பிரதமர் மோடி, ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் என் சிரிப்பை ஒப்பிட்டு பேசினார்; இதுவும் அவதுாறு தான்.
![]()
|
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கில் நீதிமன்றம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement