குஜராத்தில் மாநிலம் முழுதும் சிறைகளில் போலீசார் திடீர் ரெய்டு| Police suddenly raided prisons across the state in Gujarat | Dinamalar

குஜராத்தில் மாநிலம் முழுதும் சிறைகளில் போலீசார் திடீர் ரெய்டு

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (1) | |
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நேற்று இரவு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இம்மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட மத்திய சிறைகள் மற்றும் கிளை சிறைகள் உள்ளன. இங்கு 17-ம் மேற்பட்ட சிறைகளில் நேற்று போலீசார் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இந்த திடீர் ரெய்டு குறித்து குஜராத் மாநில காவல்துறை
Police suddenly raided prisons across the state in Gujarat  குஜராத்தில் மாநிலம் முழுதும் சிறைகளில் போலீசார்  திடீர் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நேற்று இரவு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இம்மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட மத்திய சிறைகள் மற்றும் கிளை சிறைகள் உள்ளன. இங்கு 17-ம் மேற்பட்ட சிறைகளில் நேற்று போலீசார் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் ரெய்டு குறித்து குஜராத் மாநில காவல்துறை டி.ஜி.பி., விகாஷ் சகே இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இங்குள்ள சிறைக்குள் பல்வேறு சமூக விரோத செயல்களில் கைதிகள் ஈடுபடுவதாக ரகசிய தகவல் வெளியானது.


latest tamil news

இதையடுத்து மாநிலம் முழுதும் மொத்தம் 17 சிறைகளில் 1700 போலீசார் குழுவாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு சோதனையை துவக்கினோம். சில கைதிகளிடம், மொபைல் போன் இருந்தது அவை பறிமுதல் செய்யப்பட்டது.இன்று காலையும் சோதனை தொடரும். சிறைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X