ப.வேலுார்,--பரமத்தி அருகே, காளிபாளையத்தை சேர்ந்தவர் மாயவன், 39; இவரது மனைவி லீலாவதி, 34; கூலித்தொழிலாளி.
கடந்த, 17ல், லீலாவதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த லீலாவதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த லீலாவதி, நேற்று, உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement