2 பேர் சேர்ந்து பண மோசடி எஸ்.பி., ஆபீஸில் புகார்

Added : மார் 25, 2023 | |
Advertisement
ஈரோடு,-ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வினோத் வர்மா, 49; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:நான் கெமிக்கல் வியாபாரம் செய்கிறேன். எனது சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்று, எனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி, லாபத்தொகை வழங்கி வந்தேன். என்னிடம் வியாபாரம் செய்து வந்த ஈரோட்டை சேர்ந்த ஷேக் முகமது, நாதகவுண்டன்பாளையம் அகமது


ஈரோடு,-ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வினோத் வர்மா, 49; ஈரோடு

எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:

நான் கெமிக்கல் வியாபாரம் செய்கிறேன். எனது சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்று, எனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி, லாபத்தொகை வழங்கி வந்தேன். என்னிடம் வியாபாரம் செய்து வந்த ஈரோட்டை சேர்ந்த ஷேக் முகமது, நாதகவுண்டன்பாளையம் அகமது மற்றும் அவரது காசோலையை வழங்கி பணம் பெற்று வந்தார். அந்த வகையில், ேஷக் முகமது,

அகமது ஆகியோர் எனக்கு, 45 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். பல முறை அவர்களிடம் நேரில் கேட்டும், பணம் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். என்னிடம் பெற்ற பணத்தை வைத்து, அவர்கள் வியாபாரம் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து எனது தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X