ராமநாதபுரம், : அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர இரு பாலரும் மார்ச் 31 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துஉள்ளார்.
அவர் கூறியதாவது:
விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண், பெண்கள், அதாவது 2002 டிச.26 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள், 2006 ஜூன் 26க்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 152.5 செ.மீ., பெண்கள்-152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் ஆள் சேர்ப்பு நடக்கிறது. மேலும் விபரங்களை agnipathwyu.cdac.in என்ற இணையதள முகவரில் தெரிந்து கொள்ளலாம். இணைய வழி தேர்வு மே 10 ல் நடக்கிறது. மார்ச் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அக்னிவீர் திட்டத்தில் 60 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். விமானப்படையில் 4 ஆண்டுகள் பணி புரியலாம். அதன் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து 15 ஆண்டுகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.