ரோந்து பணிக்காக 'சைரனுடன்' 10 டூவீலர்கள் ஒப்படைப்பு

Added : மார் 25, 2023 | |
Advertisement
சிவகங்கை: மாவட்டத்தில் ரோந்து பணிகளை அதிகரிக்க அரசு வழங்கிய 'சைரன்' வசதியுடன் கூடிய 10 டூவீலர்களை சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ் ஸ்டேஷன்களுக்கு வழங்கினார்.சிவகங்கை மாவட்டத்தில் சிலர் ஆயுதங்களை காண்பித்து அலைபேசி, பணம், நகை வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, நகைகளை மீட்டு வருகின்றனர். இருப்பினும் வழிப்பறி



சிவகங்கை: மாவட்டத்தில் ரோந்து பணிகளை அதிகரிக்க அரசு வழங்கிய 'சைரன்' வசதியுடன் கூடிய 10 டூவீலர்களை சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ் ஸ்டேஷன்களுக்கு வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிலர் ஆயுதங்களை காண்பித்து அலைபேசி, பணம், நகை வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, நகைகளை மீட்டு வருகின்றனர்.

இருப்பினும் வழிப்பறி குறைந்தபாடில்லை. ஏற்கனவே ஸ்டேஷன் தோறும் 'செக்டார்' போலீசார் நியமித்து அவர்கள் வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் ரோந்து பணிகளை இன்னும் பலப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சிவகங்கைக்கு 'சைரன்' வசதியுடன் 10 ரோந்து டூவீலர்களை வழங்கியுள்ளது.

அவற்றை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்புத்துார் நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பயன்படுத்தும் நோக்கில், அந்த டூவீலர்களை சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ் ஒப்படைத்தார்.

ஆயதப்படை இன்ஸ்பெக்டர் நந்தகோபால், எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் சரவணபோஸ், பழனியப்பன் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X