ஜி.பி.எஸ்., சுங்க கட்டண முறை அடுத்த 6 மாதங்களில் அறிமுகம்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-''நாட்டில் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, ஜி.பி.எஸ்., அடிப்படையிலான சுங்கக் கட்டண முறையை, ஆறு மாதங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். புதுடில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-''நாட்டில் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, ஜி.பி.எஸ்., அடிப்படையிலான சுங்கக் கட்டண முறையை, ஆறு மாதங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.



latest tamil news


புதுடில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:

மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி வருவாய் தற்போது 40 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இது, அடுத்த 2 - -3 ஆண்டுகளில், 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரப் போகிறது.

நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, செயற்கைக்கோள் வாயிலாக பூமியில் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிய பயன்படும், ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப அடிப்படையில் சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆறு மாதங்களில், இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான துாரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடைமுறை உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


கடந்த 2018- - 19ல், சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக இருந்தது.

'பாஸ்டேக்ஸ்' எனப்படும் முன்கூட்டியே பணம் கட்டி அதிலிருந்து கட்டணத்தை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Prakash - Chennai ,இந்தியா
26-மார்-202301:01:41 IST Report Abuse
Prakash பத்து ஆண்டுகளுக்கு முன் வந்த பாலுவின் கொள்ளை திட்டம் தான் இது..
Rate this:
Cancel
25-மார்-202309:48:14 IST Report Abuse
மு. செந்தமிழன் நம் நாட்டில் பட்டப்பகலில் நடக்கும் சட்டப்பூர்வமான மிகப்பெரிய வழிப்பறி தான் சுங்க கட்டணம்.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-மார்-202307:11:40 IST Report Abuse
Rpalnivelu தமிழக சுங்க சாவடிகளில் கட்டணம் மிக அதிகம் கேட்டால் பழைய ஓப்பந்தம் என்கிறார்கள் கூட்டுக் களவாணிகளான கட்டும் திருட்டு பாலுவுக்கே வெளிச்சம்
Rate this:
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
25-மார்-202308:20:57 IST Report Abuse
Ramuகடந்த பத்து ஆண்டுகளாக பாலு அமைச்சராகவோ & ஆளுங்கட்சியோ கிடையாது........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X