மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம்; ரூ.2 கோடியில் ஆய்வு பணி துவக்கம்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம் அமைப்பதற்கான அடிப்படை ஆய்வு பணிகள், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.சென்னையில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், நகரின் பிரதான பகுதிக்கு வெளியில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில்
New sub-town in Mamallapuram starts survey work at Rs.2 crore   மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம்;  ரூ.2 கோடியில் ஆய்வு பணி துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம் அமைப்பதற்கான அடிப்படை ஆய்வு பணிகள், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.


சென்னையில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், நகரின் பிரதான பகுதிக்கு வெளியில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.


கடந்த, 2008ல் இதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டாலும், சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், துணை நகர பணிகள் முடங்கின. தற்போது, துணை நகரங்கள் அமைப்பது தொடர்பான பணிகளை, சி.எம்.டி.ஏ., முடுக்கி விட்டுள்ளது.இதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய ஐந்து இடங்களில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த, அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.


சட்டசபையில் கவர்னர் உரையில், 'மாமல்லபுரம் அருகில் புதிய துணை நகரம் ஏற்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.


இதன் தொடர் நடவடிக்கைகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடுக்கி விட்டுள்ளது.



latest tamil news

அங்கு புதிய துணை நகரம் அமைய உள்ள பகுதி, அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


துணை நகரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் அருகில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, இதற்கான பகுதிகள் தேர்வு செய்யப்படும் என தெரியவந்துள்ளது.



தனியார் பங்களிப்பு?


துணை நகரம் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு உரிய வாய்ப்பு கொடுத்தால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், அரசு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் துணை நகர திட்டம் வெற்றி அடையும்.


கட்டுமான துறையினர்



- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
25-மார்-202316:38:46 IST Report Abuse
Sathiamoorthy.V இந்தியா அணுசக்தி துரையின் அணு உலைகள் இயங்கி வருகின்றன . அங்கு வீட்டு மனை பிரிவுகளை போட்டு மக்களை அலைக்கழிக்காதீர்கள் . எல்லாம் ஏமாளிகளுக்கு விற்ற பின் அணுசக்தி கமிஷன் அனுமதி அளிக்க வில்லை என மக்களுக்கு நாமம் போடாதீர்கள் .
Rate this:
Cancel
raaj -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-202312:07:42 IST Report Abuse
raaj எல்லாம் உத்தரவு.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மார்-202311:59:45 IST Report Abuse
Ramesh Sargam துணை நகரங்கள் அமைவது மிக மிக அவசியம். அமைக்கிறேன் என்று கூறி, விலை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X