திருநெல்வேலி, கோவையில் யானை இறப்பு| Elephant dies due to electrocution | Dinamalar

திருநெல்வேலி, கோவையில் யானை இறப்பு

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (1) | |
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராவுத்து கொல்லனூர் குருவம்மாள் கோவில் அடுத்துள்ள பள்ளத்தை ஒட்டிய பட்டா நிலத்தில் ஆண் யானை ஒன்று அங்குள்ள மின்சார கம்பத்தில் சிக்கி உயிரிழந்தது. நேற்று இரவு இப்பகுதியில் சுற்றிய சுமார், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தனது உடலை அங்குள்ள மின்சார கம்பத்தின் மீது உரசியது. அப்போது எதிர்பாராத விதமாக
Elephant dies due to electrocution  திருநெல்வேலி, கோவையில் யானை இறப்பு

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராவுத்து கொல்லனூர் குருவம்மாள் கோவில் அடுத்துள்ள பள்ளத்தை ஒட்டிய பட்டா நிலத்தில் ஆண் யானை ஒன்று அங்குள்ள மின்சார கம்பத்தில் சிக்கி உயிரிழந்தது.

நேற்று இரவு இப்பகுதியில் சுற்றிய சுமார், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தனது உடலை அங்குள்ள மின்சார கம்பத்தின் மீது உரசியது. அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பம் யானை மீது விழுந்தது. இதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. சம்பவ இடத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருநெல்வேலி களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலய வனத்திலும் 20 வயது பெண் யானை உயிரிழந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X