சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை: ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
மதுரை: நீதிபதிகள் நியமனத்தில் சமுக நீதி கடைப்பிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ரூபாய் 166 கோடியில், கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: நீதிபதிகள் நியமனத்தில் சமுக நீதி கடைப்பிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



latest tamil news


மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ரூபாய் 166 கோடியில், கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றது.



latest tamil news


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு காணொளியில் மயிலாடுதுறை நீதிமன்றங்களை துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு , உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டு வழக்குகளை நடத்தியது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாவது மகிழ்ச்சி. சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைய அடித்தளமிட்டவர் கருணாநிதி. நீதித்துறை உள்கட்டமைப்பில் தொலைநோக்கு பார்வையுடன் திமுக அரசு செயல்படுகிறது.


3 மாவட்ட நீதிமன்றங்கள் உள்பட 44 புதிய நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமுக நீதி கடைப்பிடிக்க வேண்டும்.


நீதித்துறை தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு ஒவ்வொரு சாமானிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். விரைந்து நீதி வழங்க உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் ஆகும்.

சுப்ரீம் கோர்ட் கிளைகளை சென்னை, மும்பை, கோல்கட்டா நகரங்களில் ்அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


பாராட்டிய மத்திய அமைச்சர்

நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நீதித்துறை உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.


கொரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு நீதியை வழங்கியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

25-மார்-202322:23:52 IST Report Abuse
ஆரூர் ரங் இந்தியாவிலேயே மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பில் நடக்கும் ஒரே நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம். மற்ற இடங்களை விட இங்கு பாதுகாப்பு குறைவு என்பதுதான் காரணம். சுப்ரீம் கோர்ட் கிளை உருவானால் அதற்கும் மறுபடியும் மத்திய படைதான் தேவை. ஏனெனில் ஏழேழு உலகங்களிலும் 😉😉 மிகப்பெரிய அமைதிப் பூங்கா தமிழகம்தான்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
25-மார்-202321:50:35 IST Report Abuse
Vijay D Ratnam கர்நாடக மக்கள் உச்சநீதிமன்றத்தின் கிளையை பெங்களூரில் தொடங்க வேண்டும் என்கிறார்கள். தென்னிந்தாவின் மையம் பெங்களூர் என்பதால்.
Rate this:
Cancel
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
25-மார்-202318:07:33 IST Report Abuse
Saravanan தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நவீன காலத்தில் வழக்கில் ஆஜராக வேண்டியவர்கள் டல்லிக்கு செல்லாமல் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்திற்கு சென்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உச்சநீதிமன்ற வழக்கில் ஆஜராக வழிசெய்ய வேண்டும்.. நாட்டின் அனைத்துபகுதி மக்களுக்கும் சமநீதி வேண்டும். அழைக்கழிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X