‛வழக்காடு மொழி; சட்ட திருத்தம் தேவை': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுரை: தமிழை வழக்காடு மொழியாக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில், 166 கோடியில், கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைக்கும் பணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: தமிழை வழக்காடு மொழியாக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.



latest tamil news


மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில், 166 கோடியில், கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைக்கும் பணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்.


நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது என்பதே எங்கள் நிலைப்பாடு. சட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற நடைமுறையை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்கள் பயன்பெற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க வேண்டும்.



latest tamil news


தீர்ப்புகளை மொழி பெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக்க அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும்.


நீதித்துறையில் மற்ற மாநிலங்கள் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு காணொலி மூலம் விசாரணை நடக்கிறது. நீண்ட தொலைவில் இருப்பவர்கள் கூட அதில் பங்கேற்க முடியும். கோவிட் காலத்தில் 2.68 கோடி வழக்குகள் தீர்வு காணந்நவ்வுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் பின்தங்கிய மக்கள், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-202319:30:08 IST Report Abuse
venugopal s நீதிமன்றங்களில் தமிழ் நடைமுறைப் படுத்துதல் பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை நடக்காது!
Rate this:
Ganesh Shetty - chennai,இந்தியா
25-மார்-202321:24:28 IST Report Abuse
Ganesh Shettyமாவட்ட நீதிமன்றம் வரை தமிழை வழக்கு மொழியாக்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .ஆனால் எந்த வழக்கறிஜரர்களும் பயன்படுத்துவதில்லை இதுகூட தெரியாமல் இவர் ஒரு தேசிய கட்சி மீதி பழிசுமத்துவது வேடிக்கை மற்றும் அவதூறு போல உள்ளது .முதலில் கருத்தை வாபஸ் வாங்கு...
Rate this:
25-மார்-202322:17:21 IST Report Abuse
ஆரூர் ரங்சந்திர சூடு பிஜெபி க்கு ஏற்காத உத்தரவுகளை அதிகம் பிறப்பித்திருப்பது உமக்குத் தெரிந்திருக்கும். அவர் தாம் வழக்காடு🤔 மொழி.பற்றி முடிவெடுக்க முடியும் மத்திய அரசல்ல....
Rate this:
Cancel
25-மார்-202316:39:29 IST Report Abuse
G. P. Rajagopalan Raju காங்கிரஸ் வேட்பாளர்
Rate this:
Cancel
25-மார்-202316:31:29 IST Report Abuse
ஆரூர் ரங் அதுவரை தமிழக உயர்நீதிமன்றம் உருவாகாது😆..மெட்ராஸ் உயர்நீதிமன்றமாகவே தொடரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X