உருவபொம்மை எரிப்பு, ரயில் மறியல்: பல மாநிலங்களில் காங்., போராட்டம்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராகுல் வெற்றி பெற்ற வயநாட்டில், காங்கிரசார் கறுப்பு நாளாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதனை தள்ளிவிட்டு சென்று
Effigies burnt, train stopped: Congress workers protest across India against Rahul Gandhis disqualificationஉருவபொம்மை எரிப்பு, ரயில் மறியல்: பல மாநிலங்களில் காங்., போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



latest tamil news

ராகுல் வெற்றி பெற்ற வயநாட்டில், காங்கிரசார் கறுப்பு நாளாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதனை தள்ளிவிட்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news

Advertisement

டில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், இளைஞர் காங்கிரசார் ராகுல் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். '' உண்மைக்காக ராகுல் தொடர்ந்து போராடுவார் '' என்ற பதாகைகளுடன் வந்து போராட்டம் செய்தனர்.



latest tamil news

சண்டிகர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார், டில்லி - சண்டிகர் இடையிலான ரயிலை மறித்து போராட்டம் செய்தனர். இதனால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news

ம.பி., மாநிலம் போபாலில் வாயில் கறுப்புத்துணி கட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர்.



latest tamil news

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மற்றும் ஜார்க்கண்டில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த காங்கிரசார், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.



latest tamil news

ராகுலின் செல்வாக்கை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது என குற்றம்சாட்டினர்.



latest tamil news

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், சட்டசபை வாயிலில் மஹா விகாஸ் அகாதி கூட்டணி கட்சியினர் தர்ணா ஈடுபட்டனர். வாயில் கறுப்புத்துணி கட்சி போராட்டம் நடத்தியவர்கள், ஜனநாயகம் இறந்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தினர்.



latest tamil news

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மார்-202322:02:27 IST Report Abuse
Ramesh Sargam ராகுலுக்கு ஆதரவாக போராடும் இந்த மக்கள், அவர்கள் சமூகத்தினரை பற்றி ராகுல் அப்படி பேசி இருந்தால் இப்படி ராகுலை எதிர்த்து அவர்கள் போராடுவார்களா?
Rate this:
Cancel
25-மார்-202321:57:05 IST Report Abuse
பேசும் தமிழன் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ....குற்றம் செய்தால் தண்டனை கொடுக்க கூடாது என்று கூறுகிறார்களா???
Rate this:
Cancel
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
25-மார்-202320:58:42 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana என்னும் எத்தனை கொத்தடிமைகள், மூளை சலவை செய்யப்பட்ட அடிமைகள் இந்த போலி காந்தி குடும்பத்திற்கு இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மனம் வேடனை படுகிறது. இதை அடிமைகள் இவர்களது ஜாதியை பற்றி ராகுல் வின்சி போலி காந்தி பேசினால் சும்மா இருப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X