வயநாடு எம்.பி., தொகுதி இடைதேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு எப்போது?

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ராகுலின் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வயநாட்டிற்கு இடைதேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரசாரத்தின் போது மோடி என்னும் சமுதாயத்தை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான் வழக்கு குஜராத் மாநிலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராகுலின் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வயநாட்டிற்கு இடைதேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



latest tamil news


2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரசாரத்தின் போது மோடி என்னும் சமுதாயத்தை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான் வழக்கு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இருப்பினும் ராகுல் கேரள மாநிலம் வயநாடு எம்.பி.,தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராகுலின் மீதான வழக்கில் சூரத் கோர்ட் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.இதனிடையே பார்லியில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அடுத்த 14 மாதங்கள் வரையில் ராகுலை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


latest tamil news


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி சட்டசபை மற்றும் பார்லி., உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அந்த காலி இடத்தை ஆறு மாத கால இடைவெளிக்குள் தேர்தல் ஆணையம் நிரப்ப வேண்டும். இதன் அடிப்படையில் ஆறு மாத கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் வரையில் உள்ளது. அதற்கு உள்ளாக ராகுலின் தொகுதியான வயநாடுக்கான தேர்தல் தேதி அறிவிப்பை எப்போது தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

vaiyapuriloganathan - karur,இந்தியா
26-மார்-202308:49:36 IST Report Abuse
vaiyapuriloganathan வயநாடு, ஈரோடு கிழக்கு
Rate this:
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
25-மார்-202320:37:49 IST Report Abuse
Jaykumar Dharmarajan அரசியல் என்ற சதுரங்கத்தில், எப்போதுமே முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது வரலாறு. திரு.ராகுல் அவர்கள் என்றோ பேசியதாக இருந்தாலும், மோடி குடும்பத்தினரைப் பற்றி பேசும் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெயரையும் குறிப்பிட்டத், ஒரு எம்.பி யாக குற்றமே. எனவே எதிர்க்கட்சியினர் இத்தை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதில் வியப்பில்லை. அதற்குறிய தண்டனையாக நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இதை அரசியல் ஆக்கி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம நடத்துவதில் அர்த்தமில்லை
Rate this:
26-மார்-202305:42:34 IST Report Abuse
அப்புசாமிஇன்னிக்கி இவிங்க... நாளக்கி இன்னொருத்தங்க....
Rate this:
Cancel
25-மார்-202320:20:39 IST Report Abuse
அப்புசாமி அதுக்கென்ன? பெரியய்யா உத்தரவு குடுத்தா நாளக்கி சொல்லி நாளன்னிக்கி தேர்தல் நடத்தி புதன் கிழமை முடிவு சொல்லிடறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X