வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை:சீர்காழி ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பயனாளி ஒருவர் அரிசி வாங்கியுள்ளார் அரிசி முழுவதும் புழுக்கள் நெளிந்து உள்ளது அந்த அரிசி நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் பயனாளிகளுக்கு வழங்கியதும் அதில் புழுக்கள் நிறைந்து இருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து ரேஷன் கடை நிர்வாகியிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பயனாளி தான் வாங்கிய புழுக்கள் நிறைந்த அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.