புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசி:சாலையில் கொட்டி நூதன போராட்டம்

Added : மார் 25, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
மயிலாடுதுறை:சீர்காழி ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை பிடாரி வடக்கு
Worm-infested ration rice: Street protests  புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசி:சாலையில் கொட்டி நூதன போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மயிலாடுதுறை:சீர்காழி ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பயனாளி ஒருவர் அரிசி வாங்கியுள்ளார் அரிசி முழுவதும் புழுக்கள் நெளிந்து உள்ளது அந்த அரிசி நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் பயனாளிகளுக்கு வழங்கியதும் அதில் புழுக்கள் நிறைந்து இருந்ததும் தெரிய வந்தது.


இதுகுறித்து ரேஷன் கடை நிர்வாகியிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பயனாளி தான் வாங்கிய புழுக்கள் நிறைந்த அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

g.s,rajan - chennai ,இந்தியா
26-மார்-202307:32:13 IST Report Abuse
g.s,rajan நம்ம மக்கள் பெரும்பாலும் அசைவம் சாப்பிடுறவங்க தானே ,அதனால எதையும் கண்டுக்க மாட்டாங்க ,புழு ,பூச்சி மற்றும் வண்டு என எது இருந்தாலும் அவங்களுக்கு ஒன்றுமே பிரச்சனை இல்லை,நிச்சயம் ஆட்சேபிக்கமாட்டாங்க....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மார்-202322:09:00 IST Report Abuse
Ramesh Sargam சாப்பாட்டுல கோழி செத்து கிடக்கு. மீன் செத்து கிடக்கு. நண்டு செத்து கிடக்கு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாப்பிடுகிறீர்கள். கொஞ்சம் புழுக்கள் உயிரோடு இருந்தா இப்படி அக்கிரமத்துக்கு போராட்டம் செய்கிறீர்களே என்று நான் கேட்கமாட்டேன். அண்ணன், நம் தானைத்தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் கேட்டாலும் கேட்பார்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-மார்-202321:54:15 IST Report Abuse
Anantharaman Srinivasan வாய் கொழுத்துப்போய் மந்திரி ஓசியில் கொடுப்பது தானே என்று சொல்லாமலிருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X