வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் :ரூ.4 ஆயிரம் வாங்கிய எஸ்.ஐ., கைது

Added : மார் 25, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
பல்லடம்:வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், சூலுார் அருகே சந்தமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மகன் பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுல்தான்பேட்டை ஸ்டேஷன்
Bribe to avoid filing a case: SI arrested for taking Rs 4,000  வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் :ரூ.4 ஆயிரம் வாங்கிய எஸ்.ஐ., கைது

பல்லடம்:வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், சூலுார் அருகே சந்தமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மகன் பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக, சுல்தான்பேட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரன், பஞ்சலிங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஜெயபிரகாஷ் புகார் அளித்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் பஞ்சலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.


இதனால், சுல்தான்பேட்டை ஸ்டேஷன் சென்ற பஞ்சலிங்கத்திடம், சி.எஸ்.ஆர்., மட்டும் போட்டு, வழக்குப்பதிவு செய்யாமல் காப்பாற்றுவதாகவும், இதற்காக, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மாலை வந்து தருவதாக கூறி சென்ற பஞ்சலிங்கம், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.


லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய, 4 ஆயிரம் ரூபாயை, எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரனிடம் பஞ்சலிங்கம் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-மார்-202311:03:10 IST Report Abuse
Kasimani Baskaran பாவம் இந்த அதிகாரி... சில்லரைக்காசுக்கு ஆசைப்பட்டு வேலையை இழந்துள்ளார். ஒழிப்புத்துறை ஒளிக்காமல் வெளிக்கொணர்ந்ததற்கு பாராட்டுக்கள்...
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
26-மார்-202306:04:23 IST Report Abuse
Kalaiselvan Periasamy இவரை வேலை நீக்கம் மற்றும் இரண்டு வருடம் சிறை தண்டனை கொடுக்க நீதிபதி என்கிற ஆசாமிகள் தண்டனை விதிப்பார்களா ?
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
26-மார்-202304:01:12 IST Report Abuse
muthu Pl ensure that he will not join after giving corruption to police higher ups .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X