வேலைக்கு நிலம் லஞ்சம்: தேஜஸ்வியிடம் விசாரணை

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி-ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். கடந்த 2004 - -2009ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, பீஹாரைச் சேர்ந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.



latest tamil news


கடந்த 2004 - -2009ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

அப்போது, பீஹாரைச் சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. வேலை வாங்கித் தருவதற்கு லாலு குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.


latest tamil news


இந்நிலையில், லாலுவின் மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி, நேற்று புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் துருவி துருவி எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவின் மகளும், எம்.பி.,யுமான மிசா பார்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

c.k.sundar rao - MYSORE,இந்தியா
26-மார்-202308:36:26 IST Report Abuse
c.k.sundar rao Arrest and send them to jail for few months, entire people of Bihar will be happy if these goons are behind bars.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X