அவதூறு வழக்கு நிற்குமா?

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு எதிராக அவதுாறு வழக்கில் தீர்ப்பு வந்ததும், அக்கட்சியின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரேணுகா சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார். 'கடந்த 2018ல் பார்லி.,யில் பேசிய மோடி, என்னை ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசினார்; என் சிரிப்பு சூர்ப்பனகையைப் போல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு எதிராக அவதுாறு வழக்கில் தீர்ப்பு வந்ததும், அக்கட்சியின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரேணுகா சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.



latest tamil news


'கடந்த 2018ல் பார்லி.,யில் பேசிய மோடி, என்னை ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசினார்; என் சிரிப்பு சூர்ப்பனகையைப் போல இருக்கிறது என்றார்; எனவே, மோடி மீது அவதுாறு வழக்கு தொடரப்போகிறேன்' என அவர் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரான ரேணுகாவுக்கு சட்டமே தெரியவில்லையே என சட்ட நிபுணர்களும், பா. ஜ., தலைவர்களும் கிண்டலடிக்கின்றனர்.

'சட்டசபையிலோ அல்லது பார்லி.,யிலோ உறுப்பினர்கள் எது வேண்டுமானாலும் பேசலாம்; அது சரியா, தவறா என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே உரிமை உண்டு; இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிடாது' என்கின்றனர் அவர்கள். 'பார்லி.,யில் எம்.பி.,க்கள் பேசுவது அவர்களுடைய உரிமை; இதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்' என குறிப்பிட்டு நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளன.


latest tamil news


'ரேணுகா வழக்கு போடுவது என்பதெல்லாம் வெறும் வாய் உதார்; செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்வார்' என்கின்றனர் பா.ஜ., சீனியர் தலைவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

26-மார்-202316:58:10 IST Report Abuse
ராஜா என்ன பாவம் செய்தாள். திருடுபவர்களோடு அவளை பிரதமர் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-மார்-202310:56:48 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடப்பதர்களும், பக்கிகளும் என்னதான் திட்டினாலும் மோடி என்ற தனிப்பட்ட மனிதனாக நின்று பிரதமர் அவர்களை மட்டுமல்லாது இராகுலைக்கூட கெளரவமாகவே நடத்தியுள்ளார். காமராஜரையும் கூட இதே போலத்தான் தீம்கா தறுதலைகள் ஊழல் செய்து ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று ஆதாரமேயில்லாமல் அள்ளிவிட்டார்கள். வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த அந்த உத்தமர் எங்கே இன்று சென்னையையே வளைத்துப்போட்டிருக்கும் திராவிட இராட்சதர்கள் எங்கே என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-மார்-202309:35:03 IST Report Abuse
Sampath Kumar இதன் மூலம் பிஜேபி ராகுலின் இமாய் வெகு வகை மக்களிடம் ஏற்றி விட்டார்கள் அதன் பழனி வரும் தேர்தலில் அவர்கள் பார்க்க போகிறார்கள்
Rate this:
26-மார்-202314:32:44 IST Report Abuse
G. P. Rajagopalan Rajuஎழுத கூட தெரியல நீ எல்லாம்.............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X