அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை: அதுவே ராகுல் பதவி இழப்புக்கு காரணம்

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
அவதுாறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதே ராகுல் எம்.பி. பதவி இழப்புக்கு காரணமாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் பதவி பறிப்பில் இருந்து தப்பி இருப்பார். திருடர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பெயரை ஒப்பிட்டு பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அவதுாறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதே ராகுல் எம்.பி. பதவி இழப்புக்கு காரணமாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் பதவி பறிப்பில் இருந்து தப்பி இருப்பார்.



latest tamil news


திருடர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பெயரை ஒப்பிட்டு பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பர்னேஷ் மோடி அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு படி எம்.பி. பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (3)ன்படி எம்.பி. - எம்.எல்.ஏ. பதவி வகிப்பவர்கள் எந்த குற்றமும் புரிந்து அதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் அந்த பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுவர்.

அதே நேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(1)ல் பல்வேறு குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த குற்றங்களுக்காக என்ன தண்டனை விதிக்கப்பட்டாலும் தகுதி இழப்பு வரும். சில குற்றங்களுக்கு அபராதம் விதித்தாலுமே தகுதி இழப்பு வரும்.

அவதுாறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது சிறையும் அபராதமும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் என்பது அதிகபட்சமானது. எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிப்பது என்பது நீதிபதியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

இரண்டு ஆண்டுகள் என தண்டனை விதிக்கப்பட்டதால் தான் சட்டப்பிரிவு 8(3) உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக விதிக்கப்பட்டிருந்தால் தகுதி இழப்பு வந்திருக்காது.

தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரை இன்னும் எம்.பி. பதவி காலியானதாக அறிவிக்கவில்லை; இடைத்தேர்தலும் அறிவிக்கவில்லை. அவ்வாறு இடைத்தேர்தல் அறிவிக்கும்பட்சத்தில் சூரத் நீதிமன்ற உத்தரவுக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கும் தடை விதிக்க கோரி ராகுல் தரப்பில் முறையிடலாம்.


latest tamil news


லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தகுதி இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முகமது பைசல் மேல்முறையீடு செய்தார். குற்றவாளி என்ற உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்தது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறும்போது ''எம்.பி. பதவியை ராகுல் இழந்தது இழந்தது தான்; தடை உத்தரவு பெற்றாலும் வெற்றி பெற்றாலும் இழந்த எம்.பி. பதவியை மீண்டும் பெற முடியாது. மேல்முறையீடு செய்து சூரத் நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற்றாலோ ரத்து ஆனாலோ தேர்தலில் போட்டியிடும் தகுதியை ராகுல் பெறுவார்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

26-மார்-202323:47:46 IST Report Abuse
பேசும் தமிழன் ஒருவன் முதல் முறை தவறாக பேசினால் விட்டு விடலாம் ....ஆனால் அதையே வழக்கமாக கொண்டு இருப்பவரை என்ன செய்வது ????
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26-மார்-202317:27:11 IST Report Abuse
Sridhar இத்தனைக்கும் பிரதமர் இதை ஒரு அவதூறாகவே எடுத்துக்கொள்ளவில்லை. எதோ சிறுபிள்ளை வாய்தவரி உளறியிருப்பான் என்ற ரீதியில் அமைதியாக சென்று விட்டார். ஆனால் ராகுல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்காததோடு மட்டும் இல்லாமல், தான் சாவர்க்கர் இல்லை என்கிறான். அப்போ உச்ச கோர்ட்டில் ஏற்கனவே இரண்டு முறை மன்னிப்பு கேட்டு வெளியே வந்தது எந்த கணக்கில்? பேசியதை மறுக்கவில்லை. பேசியது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டபின்பும் அதற்க்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. . உச்ச கோர்ட் கவனமாக இருங்கள் என்று போனமுறை எச்சரித்தும் பொறுப்பில்லாமல் பேசியது மிக பெரிய குற்றம். அதோடு இல்லாமல், இவனுடைய மன ஓட்டத்தில், நீதிபதி ஒரு ஜில்லா மாஜிஸ்திரேட் தானே அவருக்கு எங்கே தண்டனை கொடுக்கக்கூடிய அளவுக்கு தைரியம் இருக்கப்போகிறது என்கிற அகம்பாவம். நமெக்கெல்லாம் இந்த சட்டம் எல்லாம் ஒரு ஜுஜுபி என்கிற மனப்போக்கு. ஒருவேளை கொடுத்தால், அதை வைத்து அரசியல் லாபம் சம்பாதிக்கலாம் என்கிற நினைப்பு வேற மொத்தத்துல ரொம்பவே தவறான பேர்வழி. கூடிய சீக்கிரமே நாடுகடத்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
26-மார்-202316:31:26 IST Report Abuse
MARUTHU PANDIAR மார்ச் 2019 தமிழக காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுலின் ஆங்கிலப்பேச்சை ,மொழி பெயர்க்கும் பொது அவர் சொல்லாத வார்த்தையை கூறி,அவதூறாக பேசிய .... இப்போது நினைவுக்கு வராமல் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X