போராட்டம் மூலம் ஆணவத்தை வெளிப்படுத்திய காங்.,: பா.ஜ., பதிலடி

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி: ''நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, எம்.பி., பதவியில் இருந்து ராகுல் சட்டப்படி தானாக பதவியிழந்த பிறகும் காங்கிரஸ் நடத்திய போராட்டம், அக்கட்சியின் ஆணவத்தை வெளிக்காட்டுகிறது '', என பா.ஜ., கூறியுள்ளது.காங்கிரசின் சத்தியாகிரக போராட்டம் குறித்து பா.ஜ., செய்தித்தொடர்பாளர் சுதன்ஷூ திரிவேதி கூறியதாவது: காங்கிரசின் போராட்டம், மஹாத்மா காந்தியை இழிவுபடுத்துகிறது.
CONGRESSs Satyagraha Was For Society: BJP On Congress Protestபோராட்டம் மூலம் ஆணவத்தை வெளிப்படுத்திய காங்.,: பா.ஜ., பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ''நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, எம்.பி., பதவியில் இருந்து ராகுல் சட்டப்படி தானாக பதவியிழந்த பிறகும் காங்கிரஸ் நடத்திய போராட்டம், அக்கட்சியின் ஆணவத்தை வெளிக்காட்டுகிறது '', என பா.ஜ., கூறியுள்ளது.


காங்கிரசின் சத்தியாகிரக போராட்டம் குறித்து பா.ஜ., செய்தித்தொடர்பாளர் சுதன்ஷூ திரிவேதி கூறியதாவது: காங்கிரசின் போராட்டம், மஹாத்மா காந்தியை இழிவுபடுத்துகிறது. தேசத்தந்தை, சமூக பிரச்னைகளுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸ், சொந்த காரணங்களுக்காக சத்தியாகிரக போராட்டம் என சொல்லி போராடுகிறது. இந்த போராட்டம் அக்கட்சியின் ஆணவத்தை வெளிக்காட்டுகிறது.



latest tamil news

காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரகமும், உண்மைக்கான போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகே, ராகுல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பிறகு சம்பந்தப்பட்ட சட்டப்படி ராகுல் தானாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிறகு போராட்டம் நடத்துவது எதற்கு? நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதை நியாயப்படுத்துவதற்கு அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறதா என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

கல்யாணராமன்   மறைமலை நகர் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுமளவு வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளது என்பதுதான் சொன்னது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மார்-202305:11:37 IST Report Abuse
J.V. Iyer மஹாத்த்மா காந்தி சொன்னத்தை, காந்தி பெயர்கொண்டு இப்போது செய்கிறார்கள். காங்கிரசை குழிதோண்டிப்புதைக்க இவ்வளவு காலம். பெருமை எல்லாம் ராகுல் காந்திக்கே.
Rate this:
Cancel
27-மார்-202300:57:40 IST Report Abuse
V.Saminathan காந்தி இந்தியர்களின் விடுதலைக்காக அன்னியரிடம்.சத்யாக்ரக போராட்டம்.நடத்தினார்-ஆனால் தற்சமய காங்கிரஸ் ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனையிலிருந்த தப்பிக்கவே போராட்டம்-அது சத்யாக்ரகமல்ல-அசத்யாக்ரகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X