ராகுல் விவகாரத்தால் எதிர்கட்சிகளுக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: சத்ருகன்சின்ஹா

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி: ராகுல் எம்.பி., தகுதிநீக்கம் நடவடிக்கை எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க கிடைத்துள்ள ஒரு சிறந்த அரசியல் நடவடிக்கை என திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., சத்ருகன்சின்ஹா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: ராகுல் விவகாரம் அரசியல் ரீதியாக நிறையவே பலனளிக்கும். இது எதிர்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராகுல் எம்.பி., தகுதிநீக்கம் நடவடிக்கை எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க கிடைத்துள்ள ஒரு சிறந்த அரசியல் நடவடிக்கை என திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., சத்ருகன்சின்ஹா தெரிவித்துள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: ராகுல் விவகாரம் அரசியல் ரீதியாக நிறையவே பலனளிக்கும். இது எதிர்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது ஜனநாயகத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது,வரும் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு கூடுதலாக 100 இடங்களை பெறுவதற்கு உதவக்கூடும். இதற்காக நாங்கள் மத்திய அரசை பாராட்டுகிறோம்.


latest tamil news


ஆயிரம் மைல் பயணத்தை ஒரு சிறு முதல் அடியில் துவங்க வேண்டும் என்ற சீன பழமொழி போல் ராகுல் விவகாரம் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஓரு அரசியல் நடவடிக்கையாக அமைந்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது மிகவும் முக்கியமான பிரச்னை இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

Muthu - Nagaipattinam,இந்தியா
27-மார்-202308:04:50 IST Report Abuse
Muthu யாரு இந்த கும்ப கர்ணன். வடநாட்டு கமலஹாசனா? சுயபுத்தி இருக்கும் எந்த மனிதனும் இப்படி உளர மாட்டார்கள். என்ன செய்வது.. பணம் படுத்தும் பாடு...... எளிதான வழிகளை ராகுல் தவிர்த்து மட்டமான அறிவுரைகள்படி இப்படி பல நபர்களை பேசவைத்து குறுக்கு வழியில் பில்டப் பண்ணிடலாம் என நினைக்கிறார். இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
27-மார்-202305:51:27 IST Report Abuse
Indhuindian ஒரு வாசகம்னாலும் திருவாசகம். அதனாலே அப்படியே இன்னும் ஒரு நாலு அவதூறுகளை பண்ணிட்டார்ன்னா கூடுதலா நானூறு சீட் கிடைக்கும் மொத்தம் ஐநூறு சீட்டு எதிர்க்கட்சியை இருக்காது அப்புறம் என்ன என்ஜாய் இந்த மாதிரிஎல்லாம் பேச யாரவது ஏஷுதி குடுப்பாங்களா இல்லே நியூஸ்பெபேர்ல போட்டோ பேர் வரனும்ன்னு அடிசுவுடறதா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மார்-202305:09:32 IST Report Abuse
J.V. Iyer நல்ல பகல் கனவு. பலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X