சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்:ராகுலுக்கு உத்தவ் கண்டனம்| Insulting Savarkar will not be tolerated: Uddhav condemns Rahul | Dinamalar

சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்:ராகுலுக்கு உத்தவ் கண்டனம்

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (16) | |
மும்பை: இந்தியாவின் ஜனநாயாகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்று பட்டுள்ளோம். அதே நேரத்தில் சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என மகா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: என்னிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் இப்போது ஆட்சியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: இந்தியாவின் ஜனநாயாகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்று பட்டுள்ளோம். அதே நேரத்தில் சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என மகா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.



latest tamil news


மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: என்னிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் திறமையற்ற அரசாங்கங்களைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.

இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன்.இது ஜனநாயகத்தின் போராட்டம், நாங்கள் உங்களுடன் நிற்போம். ஆனால், சாவர்க்கரை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். '2024ல் நீங்கள் மீண்டும் பாஜகவைத் தேர்ந்தெடுத்தால், அதற்குப் பிறகு எந்தத் தேர்தலும் வராது', என கூறினார்.


latest tamil news


முன்னதாக ராகுல் மன்னிப்பு குறித்து அளித்த பேட்டி ஒன்றில் மன்னிப்பு கடிதம் எழுதி தருவதற்கு நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X