காங்., போராட்டத்திற்கு மற்ற கட்சியினர்...ஆதரவில்லை!: அறிக்கை மட்டும் கொடுத்து வாய் மூடி மவுனம்

Updated : மார் 28, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி:லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சத்யாகிரகப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் பங்கேற்கவில்லை. தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு, மற்ற எதிர்க்கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது, காங்கிரசுக்கு
Congress, other parties did not support the protest!: Only giving a statement and keeping their mouths shut  காங்., போராட்டத்திற்கு மற்ற கட்சியினர்...ஆதரவில்லை!: அறிக்கை மட்டும் கொடுத்து வாய் மூடி மவுனம்

புதுடில்லி:லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சத்யாகிரகப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் பங்கேற்கவில்லை. தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு, மற்ற எதிர்க்கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது, காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த வழக்கில், காங்கிரசின் ராகுலுக்கு, குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் புதுடில்லியில் நேற்று, 'சங்கல்ப் சத்யாகிரகம்' எனப்படும் உறுதி ஏற்பு சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது.

மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் போராட்டம் நடத்த காங்கிரஸ் அனுமதி கேட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.


யாரும் பங்கேற்கவில்லை


இதை மீறி, ராஜ்காட்டின் வெளியே மேடையமைத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா உட்பட பல மாநிலங்களிலும், காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

காங்கிரசின் இந்த போராட்டத்தில், அதன் கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. ராகுலின் தகுதியிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் அறிக்கை வெளியிட்டன.

தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ள திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பார்லிமென்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அமளி ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில், நம் நாட்டில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக ராகுல் பேசினார். இதற்கு மன்னிப்பு கேட்க, ஆளும் பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளும் எதிர் கோஷமிட்டன. அப்போது, காங்கிரசுடன் இணைந்து, பல எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

தேசிய அளவில் தங்கள் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் தலைமை விரும்புகிறது.

ஆனால், இதற்கு பல பிராந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், ராகுல் தகுதியிழப்பு விவகாரத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளை தங்கள் தலைமையில் ஒருங்கிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டது.

ஆனால், வெறும் அறிக்கையை மட்டும் வெளியிட்டு, மற்ற கட்சியினர், காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி விட்டனர். இது, காங்கிரஸ் தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கூட்டணிக்கு ஒத்துழைப்பு


சமாஜ்வாதி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி செயல்படுமா என்பது முக்கியம் அல்ல. நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது தான் முக்கியம். எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, அனுதாபம் தெரிவிக்கும் வகையிலோ சமாஜ்வாதி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தில், பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவாக தேசிய கட்சிகள் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

வரும் லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைப்பது எங்கள் வேலையல்ல. கூட்டணிக்கு ஒத்துழைப்பு அளிப்பது தான் எங்கள் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், தன் சுயவிபர குறிப்பை ராகுல் மாற்றியுள்ளார். தன் பெயருக்கு பின்னால், தகுதி நீக்கப்பட்ட எம்.பி., என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹாத்மாவுக்கு இழுக்கு பா.ஜ., பாய்ச்சல்


இந்த போராட்டம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:நம் நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்தப் போராட்டங்களை நடத்துகின்றனர். இதற்கு சத்யாகிரகம் என்று பெயரிட்டு, மஹாத்மா காந்திக்கு இழுக்கை ஏற்படுத்திஉள்ளனர்.நாட்டின் விடுதலைக்காக மஹாத்மா காந்தி நடத்திய சத்யாகிரக போராட்டங்களை அவமதித்து உள்ளனர்.ஒரு தனி நபருக்காக, சட்டத்தை மீறிய நபருக்காக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவதுாறாக பேசியவருக்காக இந்தப் போராட்டம் நடத்துவது வெட்கக்கேடு.இவ்வாறு அவர் கூறினார்.


தியாகத்துக்கு தயார் பிரியங்கா ஆவேசம்


புதுடில்லியில் நடந்த போராட்டத்தில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா பேசியதாவது: தேர்தல்களில் போட்டியிட முடியாத அளவுக்கு ராகுலுக்கு தடை விதித்துள்ளது, ஜனநாயகத்துக்கு எதிரானது. மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான அராஜக அரசுக்கு எதிராக, அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க, எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்.


என் சகோதரர் ராகுல், தியாகியின் மகன். அவரை துரோகி எனக் கூறி பா.ஜ.,வினர் அவமதித்தனர். பா.ஜ., தலைவர்கள் பலர், எங்கள் குடும்பத்தையும், எங்கள் தாயையும் பலமுறை அவமதித்து பேசியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு போடவில்லையே? ராகுலை சிறையில் தள்ளி ஒடுக்க நினைக்கின்றனர். அவர், அதற்கு பயப்பட மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

27-மார்-202322:36:58 IST Report Abuse
suresh Sridharan அழகிரியின் ஆர்ப்பாட்டத்தில் நான்கு பேர் காங்கிரஸின் பரிதாப நிலை ஆனாலும் பரவாயில்லை கோயம்புத்தூர் வீரபாண்டி பிரிவு போராட்டத்தில் 8 பேர் இருந்தனர் பெரிய வெற்றி
Rate this:
Cancel
27-மார்-202320:27:26 IST Report Abuse
srinivasan Ramesh Home >> Current Issueவருந்தத்தக்கது, துர்பாக்கியமானதுகிரிமினல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை அளித்த நிமிடமே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்ற சட்டத்தின் கீழ், ராஹுல் தனது எம்.பி. பதவியை இழந்தது மிகவும் வருந்தத்தக்கது, துர்பாக்கியமானது. அது மட்டுமல்ல, அடுத்த 8 ஆண்டுகள் அவர் தேர்தலிலும் போட்டியிட முடியாது என்கிறது சட்டம். இந்த அவலநிலை அவருக்கு ஏற்படக் காரணம், இப்படிப்பட்ட சட்டத்தை மாற்ற சோனியா-மன்மோகன் சிங் அரசு, 2013-ல் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தைக் கிழித்துப் போட்டு, அதைத் தடுத்தது ராஹுலேதான் என்பது துர்பாக்கியம். ராஹுலின் பதவி பறி போனது தானாக நடந்தது. அதைத் தடுக்க அரசாங்கத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அதிகாரம் கிடையாது.'எல்லா திருடர்களும் மோடிகள்'“எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி, மோடி, மோடி என்று பெயர் வந்தது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி - இப்படி தேடிக்கொண்டே போனால் நிறைய மோடிகள் கிடைப்பார்கள்” என்று 2019 தேர்தல் பிரசாரத்தில் பேசினார் ராஹுல். அதைக் குறிப்பிட்டு, 'மோடி சமுதாயத்தையே இழிவுபடுத்தினார் ராஹுல்' என்று பூர்னேஷ் மோடி என்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் சென்ற வாரம் (மார்ச் - 23) ராஹுலுக்கு அபராதத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் செஷன்ஸ் நீதிமன்றம். வழக்கு பற்றிய விவரம் பின்பு. முதலில் ஏன், எப்படி சட்டத்தின் நேரடி விளைவால் அவர் பதவி இழந்தார் என்பதைப் பார்ப்போம்.“அந்த நிமிடமே நாற்காலி காலி” - நீதிமன்றம்இரண்டு ஆண்டுத் தண்டனை என்று தீர்ப்பு வந்த நிமிடமே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களின் நாற்காலி தானாகவே காலியாகி விடும் என்று - 10 ஆண்டுகளுக்கு முன் - 2013-ல் தீர்ப்புக் கூறியது உச்ச நீதிமன்றம். சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுத் தண்டனை அளித்த நிமிடமே, ராஹுல் தனது எம்.பி. பதவியை இழந்து விட்டார் என்று கூறியது யார்? இன்றும் மோடியை எதிர்க்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவரான கபில் ஸிபல்தான். அதுதான் சட்டத்தின் நிலை என்பதை மறுக்க முடியாது. “தீர்ப்பின் அடிப்படையில் ராஹுலைத் தகுதியிழப்புச் செய்ய முடியுமா?” என்று பிரபல வக்கீலான கபில் ஸிபலிடம் கேட்டார் என்.டி.டி.வி நிருபர். அதற்கு அவர், “முடியுமா என்ற கேள்வியே இல்லை. தண்டனை பெற்ற தருணமே ராஹுலின் நாடாளுமன்ற ஸீட் காலியாகி விட்டது. அதுதான் சட்டம்” என்று கூறினார் (1). சட்டத்தின் நேரடி விளைவாக நடந்த இந்தச் செயல், சபாநாயகரின் நடவடிக்கை அல்ல. அதை அவர் அறிவித்தார் அவ்வளவுதான். அவரது அறிவிப்பு ஒரு சடங்குதான்.தன் தலையில் தானே!கிரிமினல் குற்றத்துக்காக 2 ஆண்டு தண்டனை பெற்றவர்களின் பதவி பறிபோகும். தண்டனைக் காலம் முடிந்து 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நீண்ட நாட்களாக இருந்து வரும் சட்டம். அந்தச் சட்டத்தில் 1989-ல் ராஜிவ் அரசு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தண்டனை பெற்ற உறுப்பினர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததிலிருந்து மூன்று மாதத்துக்குள் மேல் முறையீடு செய்தால், வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவரது பதவி நீடிக்கும் என்று திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், 2013-ல், அந்தத் திருத்தம் அரசியல் சாஸனத்துக்கு விரோதமானது என்று கூறி, அதை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அந்தத் தீர்ப்பினால்தான் தண்டனை பெற்ற அன்றே உறுப்பினரின் பதவி பறிபோகும் என்ற நிலை சட்டத்தில் உருவாகியது.அந்தத் தீர்ப்பிலிருந்து தண்டனை பெற்ற உறுப்பினர்களைக் காப்பாற்றவே சோனியா- மன்மோகன் சிங் அரசு, அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. தண்டனை உத்தரவுக்குப் பிறகு மூன்று மாதம் பதவி பறிபோகாது அதற்குள் மேல் முறையீடு செய்து, அந்தத் தீர்ப்பு/தண்டனைக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், உறுப்பினரின் பதவி தொடரும் என்று மாற்றவே அந்த அவசரச் சட்டம். 'நான்சென்ஸ்! குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இது ஒரு சட்டமா' என்று வெகுண்ட ராஹுல், பத்திரிகையாளர் சந்திப்பில் தன் அரசாங்கத்தையே சாடினார். அந்தச் சட்ட நகலைக் கிழித்து எறிந்தார். அவமானப்பட்டு, நடுநடுங்கிப்போன மன்மோகன் சிங், அந்த அவசரச் சட்டத்தையே கைவிட்டார். அது நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ராஹுலின் பதவி பறி போயிருக்காது(2).கபில் ஸிபல் கூறியது போல் இன்று ராஹுலின் பதவி பறிபோக, அன்று அவசரச் சட்டத்தை நிறுத்திய அவரேதான் காரணம். அன்று அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், இன்று அவரது பதவி பறிபோயிருக்காது. அவர் மேல்முறையீடு செய்ய 3 மாதம் அவகாசம் கிடைத்திருக்கும். அதில் இடைக்காலத் தடை பெற்று அவரது பதவியும் பிழைத்திருக்கும். மேல் நீதிமன்றத்தில் தண்டனை கால அளவு ஒரு நாள் குறைந்தால் கூட, தண்டனை பெற்றாலும் அவர் பதவி இழந்திருக்க மாட்டார். மேலும், அவர் சட்ட நகலைக் கிழித்துப் போட்டதால், கடந்த 8 ஆண்டுகளில் லாலு யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷீத் மசூத், முகமது ஃபைஸல், உ.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸம் கான், அவரது பிள்ளை அப்துல்லா ஆஸம் கான் ஆகியோரும் பதவி இழந்தனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? அன்று ராஹுல் மற்றவர்கள் தலையில் எறிந்த கொள்ளி, இன்று அவர் தலைக்கே வந்தது. இது, தன் வினை தன்னைச் சுடும் என்ற துர்பாக்கியம் தான். வேறு என்ன கூறுவது?மன்னிப்புக் கேட்ட பிறகும் அவதூறுசூடான அரசியலில் வாய்தவறிப் பேசுவது இயற்கை. அனுபவத்தால்தான் அதைத் தவிர்க்க முடியும். ஆனால் செல்லப்பிள்ளையாக வளர்ந்த ராஹுல், அனுபவமில்லாததாலும், முதிர்ச்சியின்மையாலும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலத்திலிருந்தே அர்த்தமற்றுக் கடுமையாகப் பேசுவது என்பது தொடருகிறது. 2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு, மோடி பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மீதான துவேஷமும் அவரது பேச்சுக்களில் சேர்ந்து வெளிப்பட்டன. அவரது அவதூறு பேச்சுக்களை எதிர்த்து வழக்குகள் குவிந்தன. அதில் மூன்று முக்கியமானது. ஒன்று - ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று 2016-ல் அவர் பேசியது. காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்று கூறுவது அவதூறு என்று, ஸ்டேஸ்மன் பத்திரிகை உட்பட மற்றவர்களும் ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர்.ராஹுல் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் அவதூறு வழக்குப் போட்டார். அதைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ராஹுல். வழக்குப் போட்டவர், ராஹுல் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார். “கூறியது கூறியதுதான், மன்னிப்புக் கேட்கமாட்டேன்” என்று ராஹுல் பதில் கூறினார். “நீங்கள் ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்று கூறியது அவதூறு. மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் வழக்கைச் சந்தியுங்கள்” என்று கூறி உச்ச நீதிமன்றம், ராஹுல் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கும் தொடருகிறது. அதிலும் அவர் சிறை செல்வது நிச்சயம் என்கிறார்கள் நிபுணர்கள் (3). அடுத்து, 2019 தேர்தல் பிரசாரத்தில் ரஃபேல் பேரத்தில் ஊழல் செய்த 'சௌக்கிதார் (மோடி) சோர்' (போலீஸ்காரர் மோடி திருடர்) என்று தொடர்ந்து கூட்டங்களில் பேசினார் ராஹுல். உச்ச நீதிமன்றம், 'ரஃபேல் பேரத்தில் ஊழல் இல்லை' என்று தீர்ப்பு கூறிய பிறகும் அப்படிப் பேசுவதை விடவில்லை அவர்.அப்போது ஒரு முறை உச்ச நீதிமன்றமே, “சௌக்கிதார் (மோடி) சோர்” என்று கூறிவிட்டது என்று பொய் கூறினார் அவர். அதை எதிர்த்து உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. ராஹுல் அதன் முன்பு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். ஆனால் பிறகும், பிரதமர் மோடி, அம்பானி, நிரவ் மோடி, லலித் மோடி, அதானி எல்லோரும் திருடர்கள் என்று தொடர்ந்து பிரசாரம் செய்யும்போது, “எல்லா திருடர்களுக்கும் ஏன் மோடி என்று பெயர்” என்று அவர் பேசியதால், வந்த மூன்றாவது வழக்குதான் சூரத் வழக்கு. அந்த வழக்கு விசாரணையின்போது, மன்னிப்புக் கேட்பீர்களா என்று நீதிபதி பலமுறை கேட்டும், “மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தார் ராஹுல் என்கிறார் நாடாளுமன்ற அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி (4)
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). மற்ற கட்சிளுக்கு காங்கிரஸை அழித்தால்தான் முன்னேற்றம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.2). அதேசமயம் ராகுலை ஒழித்தால்தான் காங்கிரஸ் வளரும் என்பது காங்கிரஸ் கார்களுக்கு நன்றாகத் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X