இந்தியா, இலங்கை இடையே படகு சேவை ஏப்., 29ல் துவங்குகிறது

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
கொழும்பு-நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான பயணியர் படகு சேவை ஏப்., 29ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரியின் காரைக்கால் வரையிலான பயணியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு-நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான பயணியர் படகு சேவை ஏப்., 29ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news


இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரியின் காரைக்கால் வரையிலான பயணியர் படகு சேவை ஏப்., 29ல் துவங்க உள்ளது.


latest tamil news


பயணியர் ஒவ்வொருவரும் 100 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இலங்கையில் இருந்து 4 மணி நேர பயணத்தில் காரைக்கால் சென்றடையலாம். இந்தியா - இலங்கையை சேர்ந்த விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு இந்த பயணியர் படகு சேவையை இயக்க வாய்ப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-மார்-202315:07:34 IST Report Abuse
Raj பிஜேபி ஆளும் குஜராத்தில் வரும் அதானியின் போதை பொருள்களை இலங்கைக்கு பாதுகாப்பாக கடத்தவே பிஜேபி கூட்டணி ஆளும் காரைக்காலில் இருந்து இந்த சேவை. பயண தூரம் குறைவு, பெதுமக்களுக்காக என்றால், தனுஷ்கோடியில் இருந்து அல்லவா துவக்கபட்டிருக்க வேண்டும்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
27-மார்-202313:11:13 IST Report Abuse
M.COM.N.K.K. பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யலாமா இது பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே.இருநாடுகளும் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாமே ஆதார் அட்டையை வைத்தே இலங்கைக்கு நாம் செல்ல அனுமதிக்கலாம் நிறைய பேர் இதனால் பயன்பெறுவார்கள் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
Rate this:
Cancel
Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-202312:57:02 IST Report Abuse
Siddhanatha Boobathi மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரி காரைக்கால் துறைமுகம் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்திய இலங்கை அரசியல் கருத்தை தாண்டித் திட்டம் முன்னெடுக்கப் படுகிறது என நினைக்கிறேன் திட்டம் வெற்றி பெற்றால் தனுஷ்கோடிக்கும் தலைவன் அறுக்கும் இடையே இன்னும் ஒரு படகு போக்குவரத்து துவங்கப்பட வேண்டும் ஆனால் பயணச்சியத்தின் விலை 50 டாலர் ஏறத்தாழ இந்திய மதிப்பில் நான்காயிரம் ரூபாய் இருக்கிறது இது அதிகம் நான்கு மணி நேர பயண தூரத்திற்கு நான்காயிரம் ரூபாய் என்பது மிக அதிகம் 100 கிலோ எடை என்பது எல்லோரும் கொண்டு செல்ல வேண்டிய ஒன்றல்ல 30 கிலோ கொண்டு செல்பவர்களுக்கு பயணச்சீட்டின் விலை 2000 அளவுக்கு இருந்தால் அதிக பயணிகள் செல்வார்கள் போக்குவரத்து வெற்றி பெறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X